தமிழ்த் தெய்வம்

6/9/11

முத்துக்கள்

                .
             1 If your heart is pure,then all thin s in your world are pure.

 .       . 2..  நேற்றைய சம்பவங்களின் நினைவுகள்தான் இன்றைய மகிழ்ச்சி/கவலை.

              3.  ஒரு சந்தர்ப்பம் தவறிவிட்டால் கண்ணீர் சிந்துவதைவிட அடுத்ததும் கை நழுவிப் போகாமல் இருக்க நாம் நமது பார்வையை தெளிவாக வைத்திருக்கவேண்டும்.

            6.தாரமும் குருவும் தலை விதிப்படிதான்.

           7.படுத்தால் பாதையாகவும், நின்றால் ஏணியாகவும் செயல்பட வேண்டும்.

          8,வழ்வதற்குப் பொருள் வேண்டும்தான்,நீ வாழ்வதிலும் பொருள் வேண்டுமே.

           9.வயலைவெட்டி,வரப்பைவெட்டி, பணத்தைவெட்டினார் என் அப்பா,நான் படிப்பதற்கு.

           10.கடலில் உள்ள எத்தனையோ பொருட்கள் வலையில் சிக்குகின்றன,ஆனால் அலை சிக்குவதில்லையே.

            11.சிக்கலில் உருவாவதுதான் சிலந்தி வலை.சிலந்தி எப்போதாவது அதில் சிக்கியதுண்டா?

            12.கறையான் கட்டிய புற்றில்தான் கருநாகம் குடியேறும்.அதற்காக கறையான் வேறு புற்றுக்கள் கட்டாமலா இருக்கின்றன?

            13.வசந்தம் வந்தால் அவள் வருகின்றாள்
                  தென்றல் வந்தால் அவள் தெரிகின்றாள்
                  மழை வந்தால் மண் மணக்கும் என்
                 மனைவி வந்தால் மனம் சிரிக்கும்.

              14.என் கண் சிவந்தது' சென்னை கண்' (Madras eye)வருகை
                   கீழ்வானம் சிவந்தது கதிரவன் வருகை,
                   கிளுகிளுப்பை ஒலித்தது குழந்தையின் அழுகை.

4.   பொக்கைவாய்
               பூரிப்பில் அவள்
              குழந்தை சிரித்தது.


           5.வருகின்றது
             கடிக்கின்றது
             வாசலில் நிற்கின்றது
            கொசு.

          
  15.தும்பைப்பூ நிறச்சட்டை தூய்மையின் அடையாளம்
    
             16.தாலிக்குத் தங்கம் இலவ்சம்
                  தாலிகட்ட ஓர் ஆண் மகன்.............

             17.காலம் கருப்பு உடை அணியும் நேரம்தான் இரவு.

             18.கஷ்டப்படாமல் வாழ கஷ்டப்படவேண்டும்.
       
              19.மனிதர்களை நேசிக்கின்ற பொருட்கள் கிடையாது,ஆனால்
                  பொருட்களை நேசிக்காத மனிதன் உண்டா?

              20.சைக்கிளைக் கண்டால் ஓட்டுகின்றோம்,
                  டி.வி.இருந்தால் பார்க்கின்றோம்,
                  செல்போன் இருந்தால் பேசுகின்றோம்,
                 புத்தகங்கள் இருந்தால் படிக்கின்றோமா?

                                                                                                            காலிங்கராயர்

                 



       

6 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி
தத்துவங்களையும், வாழ்வில் மேம்படுவதற்கேற்ற சின்னக் குறிப்புக்களையும் அழகாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரொம்ப அருமை அண்ணாச்சி.

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி
தத்துவங்களையும், வாழ்வில் மேம்படுவதற்கேற்ற சின்னக் குறிப்புக்களையும் அழகாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரொம்ப அருமை அண்ணாச்சி.

ஸ்ரீராம். சொன்னது…

எல்லாமே அருமை. எதையாவது எடுத்துக் காட்டிப் பாராட்டலாம் என்றால் நிறைய பாராட்டப் பட வேண்டிய விஷயங்கள். புத்தகங்களை நேசிக்கும் எனக்கு என் வாரிசுகள் புத்தகங்கள் பற்றி கவலைப் படாமலிருப்பது வருத்தத்தைத் தருகிறதுதான். நாற்று தளத்தில் அறிமுகம் பார்த்து வந்தேன்.

ezhilan சொன்னது…

கருத்துரையிட்ட கண்மனிகளுக்கு நன்றி. காலிங்கராயர்.

நிரூபன் சொன்னது…

http://www.thamilnattu.com/2011/09/blog-post_3558.html

வணக்கம் எழிலன் அண்ணா,
இந்த இணைப்பின் வழியே உங்களை என் வலைப் பதிவில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

ஓய்வாக இருக்கும் போது என் வலைப் பக்கம் உங்கள் வருகையினை எதிர்பார்க்கிறேன்.

அம்பாளடியாள் சொன்னது…

3. ஒரு சந்தர்ப்பம் தவறிவிட்டால் கண்ணீர் சிந்துவதைவிட அடுத்ததும் கை நழுவிப் போகாமல் இருக்க நாம் நமது பார்வையை தெளிவாக வைத்திருக்கவேண்டும்.

மூன்று மூன்றாகச் சொல்லப்பட்ட முத்துகள் அனைத்தும் அருமை ஐயா .
மிக்க நன்றி பகிர்வுக்கு ........