தமிழ்த் தெய்வம்

19/9/11

சமயல் சுலபம்தான்

                                   சாப்பாட்டு சமாச்சாரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது பிரச்சினைகள் வருவது சகஜ்மே.அதிலும் சில வீடுகளில் ஆண்கள் சமைத்தால் பிரச்சினையே வருவதில்லை.ஆனால் சில கணவன்மார்கள் தங்கள் சமயலைப் ப்ற்றி தங்கள் மனைவிகளிடம் மிகவும் அலட்டிக்கொள்வார்கள்.மறைமுகமாக ஆதங்கமும் படுவார்கள்.
                              கணவன் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு,கணவன் சமைத்ததையே தின்றுவிட்டு,கண்டபடி ஊர் சுற்றி வரும் சில மனைவிமார்கள்,
 'கணவன் சமைத்ததுதானே நாம் சாப்பிடுகின்றோம் 'என்ற எண்ணமின்றி, கணவனின் சமயலை கிண்டல் பண்ணிக்கொண்டும்,கேலிப்பேசிக்கொண்டும்,ஏளனம் செய்துகொண்டும் காலம் தள்ளிக்கொண்டிருப்பார்கள்.இன்னும் சில மனைவிமார்களோ  ஒருபடி மேலே சென்று "வெந்ததைத் தின்று வீதிவலம் வருபவளா நான்?" என்றெல்லாம் பேசித்திரிவர்.  கணவனும் வாய்மூடி மௌனியாய் மனைவி காலால் இட்ட வேலையை தலையால் செய்துமுடித்து,தங்கள் மனைவி மார்களுக்கு சேவை செய்வதையே பெரும்பாக்கியமாக கருதுவதுண்டு.இந்த பிறவியில் தாங்கள் ஏதோ தங்கள் மனைவிமார்களுக்கு
சேவை செய்தால் மறு பிறவியிலாவது தங்களுக்கு நல்ல மனைவியோ அல்லது இதைவிட சிறந்த மனைவியோ கிடைப்பாள் என்று    ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிட்ப்பவர்களும் உண்டு.
                        ஒருமுறை ,ஒரு கணவன் மனைவியரிடையே சமையலைப் ற்றி பெரிய வாக்குவாதம் ஏறபட்டு, அதுவும் வய்ச்சண்டையாகி,பின்ன் ர் கைச்சண்டை ஆகும் அளவுக்கு முற்றீவிட்டது.சண்டையின் முடிவில் கணவனும் மனைவியும் சமாதானமாகி,(எல்லா வீட்டிலும் ந்டப்பதுதானே என்கிறீர்களா?) ஆளுக்குப் பதினைந்து நாட்கள் சமைப்பது என முடிவானது.அந்த ஏற்பாட்டின்படி கணவன் முதல் பதினைந்து நாட்களும் ,மனைவி அடுத்த பதினைந்து நாட்களும் சமைக்கவேண்டும்.   முதல் பதினைந்து நாடகள் கணவன் நன்றாக சமைத்து நன்றாக மனைவிக்கான பனிவிடைகள் செய்து எப்போதும்போல நல்ல பெயர் வாங்கினான்.
           அடுத்த பதினந்து நாட்கள் மனைவி சமைக்கவேண்டிய முறை வந்தது.
அவளும் கணவனிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில்,அந்த ஊரில் நன்றாக சமைக்கும் சில அனுபவம் வாய்ந்த பெண்மணிகளிடம் எல்லாம் கேட்டும்,சில தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தும்,பல சமையல் புதககங்களை நன்கு படித்தும் ,தனது கடமையே கண்ணாக கருதி நல்ல முறையில் சமையல் செய்து கணவனுக்குப் பரிமாறினாள்.கணவனும் மனைவி செய்யும் அனைத்தையும் எதுவும் கூறாமல் ஏற்றுக்கொண்டு அமைதியாக அனைத்து நாட்களையும் நன்றாக கழித்து வந்தான்.
            பதினைந்தாம் நாள் முடிவில் மனைவி கணவனிடம் நினைவுபடுத்தினாள்,"நாளை முதல் உங்கள் சமையல்.நீங்களும் என்னைப்போல நன்றாக சமைத்து என்னிடம்  மேலும் நல்ல பெயர் வாங்க வேண்டும் கடந்த பதினைந்து நாட்களில் ஒருமுறையாவது நீங்கள் என் சமைய்லில் குறை சொன்னதுண்டா?எவ்வளவு நன்றாக நான் சமைத்தேன்? என்று கூறினாள்.அதற்கு கணவனோ அமைதியாக,"ஆமாமாம், நீ பதினைந்து நாட்கள் சமைக்கின்றாயே, எப்போது முடியும் என்ற்தான் காத்துக்கொண்டிருந்தேன்" என்று கூறினான்..  ஏங்க ,நான் இந்த பதினைந்து நாட்கள் சமைத்தது ,'பதினைந்து நாட்கள் இப்படி மனைவியை  கஷ்டப்படுத்துகிறோமே என்று உங்களுக்குகவலையாக  இருந்ததா? எனக்கு சமையல் செய்வது அப்படி ஒன்றும் பெரிய சிரமமாக தெரியவில்லை.மிகச்சுலபமாகத்தான் இருந்தது.'என்றாள். அதற்கு கணவன் "ம்..ம்..சமையல் செய்தது உனக்கு சுலபமாகத்தான் இருந்தது;அதை சாப்பிட்ட எனக்க்ல்லவா தெரியும், நான் பட்ட அவஸ்தை"என்றாரே.  பிறகென்ன அங்கு தம்பதியரிடையே தொடர்ந்து தோன்றியதையும் கூறவேண்டும் என்ன?