தமிழ்த் தெய்வம்

22/5/10

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை உனக்கிருந்தால்
தரணியை நீ ஆளலாம்

தான் என்று நினைத்து விட்டால்
தறுதலையாய் வீழலாம்.

வாழ்க்கையை எல்லொருமே வ்ள்முடன் வாழ என்னுகின்றனர்.ஆனால் முடிகின்றதா?ஏற்ற் இறக்கங்க்ள்,உயர்வு தாழ்வுகள்,ஏன்? இயற்கையின் நியதியை யாரும் எதிர்பார்த்து வாழ்வதில்லை.நம்பிக்கைதான் வாழ்க்கை.குளம் வற்றிவிட்டதென்று கொக்கு நினைப்பதில்லை.மீண்டும் மழைக்காலம் வருமல்லவா? மழைக்காலம் வந்து விட்டால் மீண்டும் கோடைகாலம் வந்து விடுமே!
இருட்டிவிட்டதென்று மனித மனம் சும்மா இருப்பதில்லை.விடியல் வரும் என்ற நம்பிக்கையோடு மறுநாள் செய்யவெண்டியவற்றை அசை போடுகின்றது.இமயமலையை ஏற் என்னியவன் உயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் த்ன் எண்ணத்தை நிறைவேற்றத் த்ன்ன்ம்பிக்கையுடன் ஏறினான்.வெற்றி பெற்றான்.அப்படித்தான் உயர நினைப்பவர்கள், தன்னம்பிக்கையை முதலில் வளர்த்துக்கொள்ளவேண்டும்.த்றுதலை எண்ணம் தலை எடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பூனையைப் பிடித்த்வன் யானையைப் பிடிக்க எண்ணி தோல்வி கண்டதைப் போல நீச்சல் குளத்தில் நீந்தியவன் கடலில் நீந்தி கறையேறத் துடிப்பதைப் போல சிந்திக்ககூடாது.அப்படி சிந்தனை வரும்போது அப்படிப்பட்ட ஆற்ற்ல் நம்மிடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து,நம் உள்ளத்தைப் பக்குவப் படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு செயலில் இறங்க வேண்டும்.
"நான் என்ற் எண்ணம் வளர்ந்து விட்டால் தான் என்பதை இய்ற்கை காட்டிவிடும்"
சக்கரவர்த்தி ஜுலியஸ் ஸீசர் ஒரு காககா வலிப்புகாரர்,பேரரசனாக வாழ்ந்து காடடவில்லையா? புது உலகம் கண்ட விஞஞானி கொலம்பசுக்கு பிறவியிலேயே ஒரு கால் சூம்பி இருக்குமாம்.அவர் தனது ஊனத்தை நினைத்து உருகி நின்றிருந்தால் இன்று அமேரிக்க என்னும் அற்புத நாடு ஏது? உலகத்தின் இசை மேதை என போற்றப்படுகின்ற் பிதோவன் உண்மையிலேயே செவிடன்.அவன்தானே இசைமேதையானான்.ஆங்கிலமறிந்த அனத்துலகமும் போற்றும் அற்புதக் கவிஞன் மில்டன் இரண்டு கண்களும் பார்வையற்ற குருடன்.அவன்தானே paradise Lost என்ற காவியத்தை தீட்டியவன். அமெரிக்க நாட்டிற்கு புது வாழ்வும் புத்துணர்ச்சியும் ஊட்டிய ரூஸ்வெல்ட் தன்னுடைய இடுப்புக்கு கீழே ஊனமுற்றவர். இவரகள் எல்லோரும் எப்படி தங்கள் வாழ்வில் முன்னெற்றம் கண்டு உலகில் தலைசிற்ந்தவர்களாக உனரப்படுகின்றனர்? தாங்கள் கொண்ட தன்னம்பிக்கையால்தானே?.
என்னால் முடிந்தது ஏன் உங்களால் முடியாது? என்று கேட்கின்றார் திரு. இறையண்பு ஐ.ஏ.எஸ்.தனது திறமையாலும் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்தானே அவர் ஐ.ஏ எஸ் ஆனார்.
. உயரவேண்டுமென நம்பிக்கை வையுங்கள்.
"முடியாது என்பது மூடநம்பிக்கை
முடியுமா என்பது அவ நம்பிக்கை
முடியும் என்பதே தன்னம்பிக்கை"
உண்மை, உழப்பு, உறுதி, விடாமுயற்சி ஆகிய்வற்றைக் கைக்கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுங்கள்.வெற்றி உங்கள் கையில்.உயர்ந்து நில்லுங்கள் உலகம் உங்களை வாழ்த்தும், வணங்கும், வரவேற்கும்.

19/5/10

கவிஞர் கவிமுகில்

1. ஆர்சுத்திப்பட்டு,பிறந்தது.
ஊர்சுத்திப்பட்டு,வ்ளர்ந்தது.
கார் ஓட்டும் கலை பயிண்றது.
கடமையை கண்ணாய் நினைப்பது.
இதுதான் கவிஞர் கவிமுகில்.


2. முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாய் இலக்கிய வானில் இன்ப சிறகடித்துப்
பறக்கும் இனிய கவிஞ்ர் கவிமுகில்.

3.அறிவு ஆற்றல் பெற
அன்பு ஊற்றெடுக்க
பன்புப் பயிர் விளைய
பாசம் நிறைவடைய
" முச்சந்தி" படியுங்கள்.

4.கார்முகிலை காற்று உடைத்தால் கனமழை,
கவிமுகிலை நீ படித்தால் உன் காட்டில் மழை.

5.கவிஞன் ஒரு காலக்கண்னாடி
கவிமுகில் காலா காலத்துக்கும் கண்ணாடி

6.கவிமுகில், தான்பட்ட அறிவை வைத்துக் கொண்டு பாடுபட்டு வளர்ந்துள்ளார்,வ்ளர்ந்து கொண்டும் உள்ளார்,இன்னும் வளருவார், வாழ்த்துக்கள்.


ஆர்.சுப்ரமனியன் காளிங்கராயர்.

13/5/10

மனோரமா தொடர்ச்சி

சீர் கொலைந்த குடும்பத்தின் கதை வெளியில் தெரியாமல் வேதனையொடு அனைத்தையும் அரவனைத்துச்சென்ற் ஆச்சி அனைத்து கலை உலகத்தையும் தம் கைக்குள் அடக்கி வைத்துக்கொண்டிருந்தவர்।ஏற்றுக்கொன்ட் பாத்திரத்தின் எழில்

நிலையை யாவரும் வியக்கும் வண்ணம் எளிதில் புரிய வைத்தவர்.வாயைத் திற்னதாலே வந்து விழும் சொற்கள் எல்லாம் வ்ள்ம்
நிறைந்தவை.தேவர் குல திலகங்கலளே ஆச்சி வாழ அனைத்தும் செய்வோம்.
ந்டிப்பின் இமயத்தையும்
நகைச்சுவையின் இமயத்தையும்
நாம் காப்பொம்.வாழ்க ஆச்சி ,
வளர்க அவர் தொண்டு. காளிங்கரயர்.

மனோரமா.

இன்று காலை குமுதம் வார இத்ழ படித்ததும் துடித்துப் போனேன்।ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஆச்சிக்கா இந்த நிலை?கூடாது ।கூடவே கூடாது।இது இறைவன் திரு விளையாடலா? இயற்கையின் சதியா?
ந்டிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கனேசனுக்கு இனையாக கொடி கட்டிப் பறந்தவரல்லவா திரையுலகில்.