தமிழ்த் தெய்வம்

30/9/11

வேலை

                             நம்மில் பலர் இன்று வேலை தேடுவதையே பெரிய வேலையாக கருதி செயல்படுகின்றனர்.இந்த கால இளைஞ்ர்கள் வேலை தேடும் கொள்கையை முனைப்புடன் செயல்படுத்தும் அதே நேரத்தில்,எப்படி வேலை தேடவேண்டும்,எங்கு வேலை தேடவேண்டும்,யார் மூலம் வேலை தேடவேண்டும், என்றெல்லாம் ந்னறாக அலசி ஆராய்ந்து, நல்ல வழியில் சென்று முய்ற்சிக்க வேண்டும். குறுக்கு வ ழியில் சென்றால் குடும்பத்துக்கு அவப்பெயரும்,மேலும், தனக்கு கெட்டபெயரையும்தான் தேடிக்கொள்ளவேண்டும்.
                                      
                                  ஒருவன் வேலை சம்பந்தமாக முக்கிய பிரமுகர் (வி.ஐ.பி) ஒருவரிடம் சென்றான்.கூடவே தனது தந்தையையும் அழைத்துச்சென்றான்.அவ்னது தந்தையும் அந்த பிரமுகரை வணங்கி தனது மகனுக்கு வேலை வாங்கி தரும்படி வேண்டினார்."சரி,பார்க்கலாம், உங்கள் பையன் எந்த நிறுவனத்திற்கு மணு செய்துள்ளான்?" எனக் கேட்டார்."எங்கேயும் இல்லை அய்யா,தாங்கள் பார்த்து எங்கேயாவது வாங்கி கொடுங்கள், என் பையன் திற்மையை பிறகு பாருங்கள்" என்றார் .பிரமுகருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சற்று யோசித்துவிட்டு, "சரி நான் என்னைய்யா ,மற்றவர்களுக்கு வேலை தரும் அளவிற்கு எந்த நிறுவனமும் நடத்தவில்லையே,என்னால் ,யாரிடமாவது சொல்லி, வேலை தரச்சொல்லலாமே தவிர, நான் எப்படி வேலை தர முடி யும்?.அதுவும் நீங்கள் எங்காவது 'வேலைக்கு ஆள் கேட்டிருக்கின்றர்கள்.அதற்கு மணு செய்துள்ளேன்,கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்' என்றால் சரி.அதை விடுத்து, சும்மா வந்து நின்றுகொண்டு 'எனக்கு எங்கேயாவது வேலை வாங்கி கொடுங்கள் 'என்றால் என்னால்  எப்படி செய்யமுடியும்?.என்று கேட்டார்.
                    " நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும், என்று கூறுங்கள்? அதன்படி நாங்கள் செய்கின்றோம்'  என்று தந்தையும் த்னயனும் விவரத்தை ந்ன்றாக அறிந்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்  இது ஒருவகையான வேலை தேடும் நிலைப்பாடு.
             தந்தயும் மகனும் இனி எந்தெந்த நிறுவனங்களில் ஏறி, இறங்க இருக்கின்றன்ரோ அது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

                   இனி  இன்னொருவகையான வேலை தேடும் முறையைப்பார்ப்போம்..

                ஒரு நிறுவனத்தில்,சில குறிப்பிட்ட வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் வந்தது.அந்த நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை விட ஏறத்தாழ ஐம்பது மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்து சேர்ந்து விட்டன. மேலும் இறுதி நாளன்று மாலை 5.00 மணியளவில் ஒரு விண்ணப்பதாரர் வந்து தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார்.
                    "நேரம் முடிந்து விட்டது."எனக் கூறி அவருடைய வியண்ணப்பத்தை நிராகரித்தார்,அங்கிருந்த கடை நிலை ஊழியர்.ஆனால் விண்ணப்பதாரரோ,'தாம் வந்த பேருந்து சற்று தாமதமாக வந்து விட்டது,சற்று பொருத்தருள வேண்டும்.தயவு செய்து ஏற்றுக்கொள்ளூங்கள்" என்று மன்றாடினார்.ஆனால் கடைநிலை ஊழியர் அவரை பொருட்படுத்தாமல்,தனது மேல்நிலை ஊழியரை வரவழைத்தார்.வந்தவரும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தாரேயன்றி,விண்ணப்பத்தாரருக்கு ஆதரவாக செயல்படவில்லை.பிறகு இரண்டு முதுநிலை மேலாளர்கள் வந்தனர்.அவர்களும் அதே பதிலைத்தான் தந்தனர். இவ்வளவையும் ,தாமதமாக வந்த வேறு சிலரும்,பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
       ஆனால் நமது நாயகனோ அங்கிருந்து செல்வதாக இல்லை.பின்னர் ஒரு வழியாக அங்கிருந்தவர்களிடம் அணுமதி பெற்றுக்கொண்டு மேலான்மை இயக்குனரை நேரடியாக சென்று சந்தித்து தனது காலதாமதத்துக்கான காரணத்தையும், தனது குடுமப நிலையையும் ,மிகத் தெளிவாக விவரித்தான்.மேலான்மை இயக்குனரோ "நீ சொல்வது சரிப்பா,ஆனால் இந்த நிலையில் என்னால்  எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றேனே"என்று இழுத்து.. "இப்பொழுது வந்துள்ள இவ்வளவு விண்ணப்பங்களையும் எப்படி பிரித்து,தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது என்பதே பெரிய வேலையப்பா,"என்று அவர் கூறி முடிப்பதற்குள், "அய்யா, அந்த வேலையையாவது எனக்கு கொடுங்களேன்.நான் அதை பிரித்து தேர்ந்தெடுக்கும் வேலையை பார்க்கின்றேனே?"என்றார் அதற்கும் எம் .டி.,,"முன்பே அதற்காக,ஒருசிலரை நியமித்துள்ளோமே" என்றார்..இத்ற்கும் இந்த விடாக்கண்டன் கொடாக்கண்டனாக மாறி,"அவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன அ ய்யா ,எப்படியாவது எங்கள் குடும்பத்தை சில நாட்களாவது பட்டினியிலிருந்து காப்பாற்றிய புண்ணியம் உங்களைச்சாரும் " என்று கூறினான்.
                 இதற்குமேல் எம்.டி.யால் ஏதும் பேசமுடியவில்லை.அவரும் மனிதர்தானே? எவ்வள்வு பெரிய இடத்தில் இருந்தாலும் மனம் எல்லோருக்கும் மனிதநேயத்துடந்தானே அமைந்துள்ளது?.பிறகு ஒருவாறு சமாளித்து,"சரி, சரி,நாளை வந்து என்னைப் பார்.நான் ஏதாவது செய்கின்றேன்" என்றார்.
                மறுநாள் நமது ஆள் சென்றார்,வேலை கிடைத்தது.இவருடைய வேலைத்திறமையைப் பார்த்து தொடர்ந்து அந்த அலுவலகத்திலேயே வேலையில் சேர்ந்து நன்றாக பணியாற்றி அனைவரிடமும் நல்ல பெயர் வங்கினான்.
                  சில நாட்களில், அங்கு வேலை பார்க்கும்  அனைவரும்,"நீ நல்ல திறமையும் யாரிடம் எப்படிப் பேசவேண்டும் என்ற புத்திசாலித்தனமும்
உடைவன். உன்னைத்தான்யா ""வந்தான் ,வென்றான்"என்று சொல்ல வேண்டும்" என்று கூறி அவனை திக்குமுக்காட செய்தனர்.


19/9/11

சமயல் சுலபம்தான்

                                   சாப்பாட்டு சமாச்சாரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது பிரச்சினைகள் வருவது சகஜ்மே.அதிலும் சில வீடுகளில் ஆண்கள் சமைத்தால் பிரச்சினையே வருவதில்லை.ஆனால் சில கணவன்மார்கள் தங்கள் சமயலைப் ப்ற்றி தங்கள் மனைவிகளிடம் மிகவும் அலட்டிக்கொள்வார்கள்.மறைமுகமாக ஆதங்கமும் படுவார்கள்.
                              கணவன் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு,கணவன் சமைத்ததையே தின்றுவிட்டு,கண்டபடி ஊர் சுற்றி வரும் சில மனைவிமார்கள்,
 'கணவன் சமைத்ததுதானே நாம் சாப்பிடுகின்றோம் 'என்ற எண்ணமின்றி, கணவனின் சமயலை கிண்டல் பண்ணிக்கொண்டும்,கேலிப்பேசிக்கொண்டும்,ஏளனம் செய்துகொண்டும் காலம் தள்ளிக்கொண்டிருப்பார்கள்.இன்னும் சில மனைவிமார்களோ  ஒருபடி மேலே சென்று "வெந்ததைத் தின்று வீதிவலம் வருபவளா நான்?" என்றெல்லாம் பேசித்திரிவர்.  கணவனும் வாய்மூடி மௌனியாய் மனைவி காலால் இட்ட வேலையை தலையால் செய்துமுடித்து,தங்கள் மனைவி மார்களுக்கு சேவை செய்வதையே பெரும்பாக்கியமாக கருதுவதுண்டு.இந்த பிறவியில் தாங்கள் ஏதோ தங்கள் மனைவிமார்களுக்கு
சேவை செய்தால் மறு பிறவியிலாவது தங்களுக்கு நல்ல மனைவியோ அல்லது இதைவிட சிறந்த மனைவியோ கிடைப்பாள் என்று    ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிட்ப்பவர்களும் உண்டு.
                        ஒருமுறை ,ஒரு கணவன் மனைவியரிடையே சமையலைப் ற்றி பெரிய வாக்குவாதம் ஏறபட்டு, அதுவும் வய்ச்சண்டையாகி,பின்ன் ர் கைச்சண்டை ஆகும் அளவுக்கு முற்றீவிட்டது.சண்டையின் முடிவில் கணவனும் மனைவியும் சமாதானமாகி,(எல்லா வீட்டிலும் ந்டப்பதுதானே என்கிறீர்களா?) ஆளுக்குப் பதினைந்து நாட்கள் சமைப்பது என முடிவானது.அந்த ஏற்பாட்டின்படி கணவன் முதல் பதினைந்து நாட்களும் ,மனைவி அடுத்த பதினைந்து நாட்களும் சமைக்கவேண்டும்.   முதல் பதினைந்து நாடகள் கணவன் நன்றாக சமைத்து நன்றாக மனைவிக்கான பனிவிடைகள் செய்து எப்போதும்போல நல்ல பெயர் வாங்கினான்.
           அடுத்த பதினந்து நாட்கள் மனைவி சமைக்கவேண்டிய முறை வந்தது.
அவளும் கணவனிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில்,அந்த ஊரில் நன்றாக சமைக்கும் சில அனுபவம் வாய்ந்த பெண்மணிகளிடம் எல்லாம் கேட்டும்,சில தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தும்,பல சமையல் புதககங்களை நன்கு படித்தும் ,தனது கடமையே கண்ணாக கருதி நல்ல முறையில் சமையல் செய்து கணவனுக்குப் பரிமாறினாள்.கணவனும் மனைவி செய்யும் அனைத்தையும் எதுவும் கூறாமல் ஏற்றுக்கொண்டு அமைதியாக அனைத்து நாட்களையும் நன்றாக கழித்து வந்தான்.
            பதினைந்தாம் நாள் முடிவில் மனைவி கணவனிடம் நினைவுபடுத்தினாள்,"நாளை முதல் உங்கள் சமையல்.நீங்களும் என்னைப்போல நன்றாக சமைத்து என்னிடம்  மேலும் நல்ல பெயர் வாங்க வேண்டும் கடந்த பதினைந்து நாட்களில் ஒருமுறையாவது நீங்கள் என் சமைய்லில் குறை சொன்னதுண்டா?எவ்வளவு நன்றாக நான் சமைத்தேன்? என்று கூறினாள்.அதற்கு கணவனோ அமைதியாக,"ஆமாமாம், நீ பதினைந்து நாட்கள் சமைக்கின்றாயே, எப்போது முடியும் என்ற்தான் காத்துக்கொண்டிருந்தேன்" என்று கூறினான்..  ஏங்க ,நான் இந்த பதினைந்து நாட்கள் சமைத்தது ,'பதினைந்து நாட்கள் இப்படி மனைவியை  கஷ்டப்படுத்துகிறோமே என்று உங்களுக்குகவலையாக  இருந்ததா? எனக்கு சமையல் செய்வது அப்படி ஒன்றும் பெரிய சிரமமாக தெரியவில்லை.மிகச்சுலபமாகத்தான் இருந்தது.'என்றாள். அதற்கு கணவன் "ம்..ம்..சமையல் செய்தது உனக்கு சுலபமாகத்தான் இருந்தது;அதை சாப்பிட்ட எனக்க்ல்லவா தெரியும், நான் பட்ட அவஸ்தை"என்றாரே.  பிறகென்ன அங்கு தம்பதியரிடையே தொடர்ந்து தோன்றியதையும் கூறவேண்டும் என்ன?

12/9/11

புதிய பார்வை

      மனிதர்களாய் பிறந்த அனைவரும் தினம் தினம் புதிதாய் பிறந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.அப்படி பிறக்காதவர்கள் வாழததெரியாதவர்கள்.புதிதாய் பிறக்கின்றார்கள் என்றால்,புதிதாய் இந்த உலகைப் பார்க்கின்றாரகள்,புதியவர்களை நேசிக்கின்றார்கள்,புதிய எண்ணங்களை வளர்த்துக்கொள்கின்றார்கள்,புதிய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்கின்றார்கள்.
            தினம் தினம் மனிதன் விழித்து எழுந்ததும் புதி ய  வானத்தைப் பார்க்கின்றான், புதிய கதிரவனைக் கானுகின்றான்,புதிய மல்ர்களை நோக்குகின்றான்,புதிய பறவகள்,புதிய காற்று, புதிய நீர், புதிய நண்பர்கள், புதிய சிந்தனை, புதிய ஓசை, புதிய நாற்றம்,புதிய சாலைகள்,புதிய மேகம் ,புதிய மழை, புதிய தென்றல்,இன்னும் என்னென்னவோ, அவன் பார்க்கும் அனைத்துமே புதியவைகள்தான்.
     நேற்றுப் பார்த்த வானத்தையா நாம் இன்று பார்க்கின்றோம்? அதில் எத்தனை மாற்றங்கள்? எத்தனை வண்ணங்கள்?அத்தனையும் புதிதாய், புதிய தோற்றத்துடன்!  கதிரவனின் ஒளிக்கதிர்களும் அப்படித்தானே,.எத்தனை மாற்றங்கள்? சிலநேரங்களில் வானில் மேகமூட்டம் இருந்தால்,கதிரவனைக் கானவே முடியாதே! மரங்க்ள்,செடிகொடிகள்,புள்ளினங்கள் அனைத்திலுமே புதிய தோற்றங்கள் ,புதிய பரிமான்ங்கள்,அப்பப்பா,அனைத்தும் இயற்கையின் திருவிளையாட்ல்தானே.
                 நாம் உள்ளீழுத்து,வெளிவிடும் மூச்சுக்காற்றும் புதியவைதானே.ஏன், நம்து மூச்சுகூட புதுசுதானே.இப்போதுதான் நாம் புதிதாய் பிறக்கின்றோம்.கவி பாரதி சொன்னானே "இன்று புதிதாய்ப் பிறந்தோம்" என்று.ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் புதிதாய்த்தான் பிறக்கின்றான்.நாள் வளர வளர மனிதனும் வளர்கின்றான்,எப்போழுதும் புதிதாய் வளர்ந்துகொண்டேயிருக்கின்றான்.அந்த புதிய வள்ர்ச்சியில்தான் மனிதனின் எண்ணங்கள் வள்ர்ந்து கொண்டேயிருக்கின்றன.புதிதாய் பிறக்கின்ற ஒவ்வொருநொடியிலும் நம்து முந்தைய எண்ணங்கள் மறைந்து புதிய எண்ணங்கள் உத்யமாகின்றன. நம்மிடம் இருக்கின்ற மகிழ்ச்சி, கோபம் ,வண்மம், பயம்,.அறிவு, ஆற்றல் அனைத்துமே புதிதாய்த்தான் உருவகம் பெறுகின்றன.
       எவனொருவன் தினம் தினம் புதிதாய் பிறக்கின்றானொ அவனெப்போதும் திருப்தியுடன் இருக்கின்றான்.அவனது பார்வயில் கூர்மை தெரியும்,அவனது உடலில் இளமை துள்ளிவிளையாடும்,அவனது ஆற்றலில் அதிக வேகம் இருக்கும்,அவனது மனதில் மகிழ்ச்சி தாண்டவமாடும்,அவனது சிந்தனையில் தெளிவு தெற்றென தோற்றமளிக்கும்.
          தான் என்ற தன்மை கொண்டு,தறுதலையாக வாழும் எண்ணங்களை மறக்க வேண்ண்டும்.தான் என்ற தர்க்கம்,தறுதலை என்ற மூர்க்கம் ஆகியவ்ற்றைக் கொண்டிருப்பவன் மீண்டும் புதிதாய் பிறப்பதேயில்லை .
தன்னுடைய என்ற தன்மையை ஒருவன் இழக்க முன்வர வேண்டும்.என்னுடைய என்ற இறுமாப்பை எவன் என்றும் கைக்கொள்கின்றானோ அவன் தினம் தினம் இறப்பவன்,பிறப்பவனல்ல..எவன் காலச்சக்கரத்தின் சுழற்சியில் அகப்படாமல்  புத்துணர்ச்சியோடு புது உலகை
காண்கின்றானோ அவனே புதிதாய் பிறப்பவன்.
                        "அடுத்தவனை தோற்கடித்தல் உனது வெற்றியல்ல. உனது குறிக்கோளை நீ அடைவதுதான் உன்னுடைய உண்மையான வெற்றி.""

8/9/11

கண்ணதாசன் கருத்துக்கள்

தத்துவம்      ஒன்று நடந்துதான் தீருமென்றால் அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்?
              இந்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள்.இருட்டையே வெளிச்சமாக்கிக்கொள்ளுங்கள்.நஷ்டத்தையே லாபமாக்கிக்கொள்ளூங்கள்.எது நேர்ந்தாலும் கவலைப்ப்டாதீர்கள்.விதி என்ற உண்மையைப் போட்டு அதை துடைத்துவிடுங்கள்.
            எந்தசெய்தியையும் அமைதியாக கேளூங்கள்.உடம்பை அலட்டிக்கொள்ளாதீர்கள்.
           யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக்கொண்டிருந்தால்,'நீங்கள் சொல்வதே சரியாக இருக்கக்கூடும்' என்று சொல்லிவிடுங்கள்.
           உங்களை 'முட்டாள்' என்று திட்டினால்"எனக்கு கூட அந்த சந்தேகம் உண்டு"என்று கூறுங்கள்.
            உங்கள் மனைவி சண்டை போட்டால் "சம்சாரத்தில் இதுதான் முக்கிய கட்டம்"என்று கருதுங்கள்.
          யாராவது உங்களை அவமானப்படுத்தினால் ஒரு அனுபவம் செகரிக்கப்பட்டுவிட்டதென்று கருதுங்கள்.
           வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு,மூன்று என்று அநுபவமாக சேகரித்துக்கொள்ளுங்கள்.
            புதுப் புது அனுபவமாக சேகரியுங்கள ஒரே அநுபவத்திற்கு  இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள்.
              'நம்மால் ஆனது ஒன்றுமில்லை' என்ற நினைப்பு,'நமக்கு வந்தது துன்பமில்லை'என்று நினைக்க வைத்து சாந்தியைத் தரும்.
              நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம்கூட கோர்ட்டை மிதிக்கும்படி விதிவவைக்கிறதே! உனக்கும் எனக்கும் வருவது துன்பமா என்ன?


                 கண்ணதாசனின் "அர்த்த்முள்ள இந்துமதம்"என நூலிலிருந்து.

காலாம்புடிக்கியும், மேணாமிணுக்கியும். (நையாண்டி தொடர்)

     கா.பு: என்னடா, மேணா மிணுக்கி,கொஞ்ச நாளா ஆளையே கானோம்?
    மே.மி: இல்லண்ணே.கொஞ்சம் ஊருக்குப் போயிருந்தேன்.மழை பெய்ததால ஒடனே வர முடியல.
      கா.பு.:சரிடா,இந்த கருனாநிதி என்னடா திருச்சி இடைத்தேர்தல ல போட்டி போட மாட்டோம்னு சொல்லியிரூக்காரு?அப்பறம்,உள்ளாட்சித் தேர்தலையும் புறக்கனிப்போம்னும் ஆலோசணை பண்ணிகிட்டு இருக்காராம்.
     மே.மி: என்னண்ணே,அவ்வள்வு மோசமாவா போயிடுச்சு,தி.மு.க?
      கா.பு:ஆமாடா, ஆட்சியில் இருக்கும்போதே தமிழ்நாடு முழுவதும் போட்டி போட்டு,எதிக்கட்சியா கூட வரமுடியல.இனிமே என்னத்த போட்டியிட்டு,எப்படி ஜெயிக்கமுடியும்னு செயற்குழுவுல ஆலோசணை பன்னப் போறாராம்.
        மே.மி: ஆமாண்ணே,செய்ற்குழுகூட்டம் கடலூரா? வேலூரா?,பாளையங்கோட்டையா?,சேலமா?, திருச்சியா?,அல்லது கோவையா?
        கா.பு:டேய், அநேகமா டில்லியில் இருக்கும்னு நினைக்கிறேண்டா.ஏன்னா,
       அங்கதாண்டா கனிமொழி இருக்குது.
        மே.மி:அது சரிண்ணே, சட்டமன்றத்துக்கே போகமாட்டோம்னு சொல்லிபுட்டு திடீர்னு போறாங்க,திடீர்னு போகமாட்டோம்னு சொல்றாங்க.அப்புறம் போய்ட்டு தினசரி வெளிநடப்புன்றாங்க.....
        கா.பு:அதாண்டா,அவங்க சானநாயகம்.இதுகூட பரவாயில்லடா,பேரவைத்தலைவ்ர் திருக்குறள் படிச்சதுக்கே வெளிநடப்புன்னா பாத்துக்கடா.இனிமேல் திருவள்ளுவ்ரே வந்தாலும் இந்த தி.மு.க காரங்களையும்,கருனாநிதியையும் திருத்தவே முடியாதுப்பா.
        மே.மி:அது சரிண்ணே,பாண்டிச்சேரியில் என்.ஆர். காங்கிரஸை ஆதரிக்கிறதா ராம்தாஸ் சொல்லியிருக்கின்றாரே.
         கா.பு. ஆமாடா,இப்ப மீண்டும் அவருக்கு சாதி உணர்வு தலை தூக்குதுன்னு நினைக்கிறேண்டா.
         மே.மி:ஏண்ணே, ராம்தாஸ்க்கும், திருமாவளவனுக்கும் இந்த சாதிய விட்டா வேறு எதுவும் அரசியலில் தெரியாதா?
           கா.பு.:டேய், ராம்தாஸ்க்கு தன் மகன் அன்புமணி மந்திரியாகனும்,திருவுக்கு தானும் அரசியலில் இருக்குறோம் என்பதைக் காட்டிக்கொள்ளனும்.அவ்வள்வுதாண்டா.
             மே.மி:சரிண்ணே, வேறு ஏதாவது பொது தகவல் இருக்கண்ணே?
             கா.பு:  இருக்குடா இருக்கு."வரும் 27 ந்தேதியிலிருந்து 140 என்ற எண்ணிலிருந்து மட்டும்தான் வியாபார அழைப்புக்கள் நமது செல்லிடப்பேசிக்கு வரலாம். அதையும் நாம் வேனாம் என்று பதிவு செய்த்விட்டால் மீண்டும் அந்த அழைப்பு வரக்கூடாது.
             மே.மி: நல்ல தகவ்ல் அண்ணே, வரட்டுமா?.

6/9/11

முத்துக்கள்

                .
             1 If your heart is pure,then all thin s in your world are pure.

 .       . 2..  நேற்றைய சம்பவங்களின் நினைவுகள்தான் இன்றைய மகிழ்ச்சி/கவலை.

              3.  ஒரு சந்தர்ப்பம் தவறிவிட்டால் கண்ணீர் சிந்துவதைவிட அடுத்ததும் கை நழுவிப் போகாமல் இருக்க நாம் நமது பார்வையை தெளிவாக வைத்திருக்கவேண்டும்.

            6.தாரமும் குருவும் தலை விதிப்படிதான்.

           7.படுத்தால் பாதையாகவும், நின்றால் ஏணியாகவும் செயல்பட வேண்டும்.

          8,வழ்வதற்குப் பொருள் வேண்டும்தான்,நீ வாழ்வதிலும் பொருள் வேண்டுமே.

           9.வயலைவெட்டி,வரப்பைவெட்டி, பணத்தைவெட்டினார் என் அப்பா,நான் படிப்பதற்கு.

           10.கடலில் உள்ள எத்தனையோ பொருட்கள் வலையில் சிக்குகின்றன,ஆனால் அலை சிக்குவதில்லையே.

            11.சிக்கலில் உருவாவதுதான் சிலந்தி வலை.சிலந்தி எப்போதாவது அதில் சிக்கியதுண்டா?

            12.கறையான் கட்டிய புற்றில்தான் கருநாகம் குடியேறும்.அதற்காக கறையான் வேறு புற்றுக்கள் கட்டாமலா இருக்கின்றன?

            13.வசந்தம் வந்தால் அவள் வருகின்றாள்
                  தென்றல் வந்தால் அவள் தெரிகின்றாள்
                  மழை வந்தால் மண் மணக்கும் என்
                 மனைவி வந்தால் மனம் சிரிக்கும்.

              14.என் கண் சிவந்தது' சென்னை கண்' (Madras eye)வருகை
                   கீழ்வானம் சிவந்தது கதிரவன் வருகை,
                   கிளுகிளுப்பை ஒலித்தது குழந்தையின் அழுகை.

4.   பொக்கைவாய்
               பூரிப்பில் அவள்
              குழந்தை சிரித்தது.


           5.வருகின்றது
             கடிக்கின்றது
             வாசலில் நிற்கின்றது
            கொசு.

          
  15.தும்பைப்பூ நிறச்சட்டை தூய்மையின் அடையாளம்
    
             16.தாலிக்குத் தங்கம் இலவ்சம்
                  தாலிகட்ட ஓர் ஆண் மகன்.............

             17.காலம் கருப்பு உடை அணியும் நேரம்தான் இரவு.

             18.கஷ்டப்படாமல் வாழ கஷ்டப்படவேண்டும்.
       
              19.மனிதர்களை நேசிக்கின்ற பொருட்கள் கிடையாது,ஆனால்
                  பொருட்களை நேசிக்காத மனிதன் உண்டா?

              20.சைக்கிளைக் கண்டால் ஓட்டுகின்றோம்,
                  டி.வி.இருந்தால் பார்க்கின்றோம்,
                  செல்போன் இருந்தால் பேசுகின்றோம்,
                 புத்தகங்கள் இருந்தால் படிக்கின்றோமா?

                                                                                                            காலிங்கராயர்