தமிழ்த் தெய்வம்

28/7/11

கோபம்

         கோபம் என்பது வரவே கூடாது.வந்து விட்டால் அதை உடனே தனித்துவிடவேண்டும்.மீறினால் அது ஆளையே அபகரித்துவிடும்.கோபம் பலவகை உண்டு.அதில் கீழ்கண்ட மூன்றைமட்டும் பார்க்கலாம்.
     முதல் வகை; எறும்புக்கடி. இது பெற்றோர்களின் கோபம்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கோபன் கொண்டால்,பெற்றோர்,பிள்ளைகள் இருவருமே சில நிமிடங்களிலேயே அதை ஒரு தேய் தேய்த்துவிட்டு எறும்புக்கடியை மறப்பது போல் மறந்து விடுவர்.
    இரண்டாவது வகை; தேள்கடி.இது கணவன் மனைவிக்குள் ஏற்படும் கோபம்.கணவன்  மனைவி இருவரும் கோபப்பட்டால் இரண்டொரு நாட்களில் தங்களுக்குள்ளேயே கோபத்தை மற்ந்து சதாரண நிலைக்கு திரும்பி விடுவர்.
     மூன்றாவது வகை;பாம்புக்கடி .யாரிடத்தில் கோபம் கொண்டாலும் அதை மூண்று நாட்களுக்கு மேல் நீடிக்க விடுவது.இப்படி குறிப்பிட்ட நாட்களூக்கு மேல் கோபத்தை நீடிக்கவிட்டால் அது ஆளையே, இல்லை வாழ்க்கையையே அழித்துவிடும்.
      ஆதலால் கொல்லும் ந்ச்சான கோபத்தை தவித்து நாம் நலமுடன் வாழ நாம் அனைவரும் பண்போடும் பாசத்தோடும் வாழ கற்றுக்கொள்வோம். எழிலன்

12/7/11

தஸ்லிமா நஸ்ரின்

உற்வுகளுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறேன்.
         சமீபத்தில் கவிஞ்ர் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய 'இது எனது நகரம் இல்லை' என்ற கவிதை தொகுப்பு திருமதி. யமுணா ரஜேந்திரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் படிக்க நேர்ந்தது.நல்ல கவிதைகள். நல்ல கருத்துகள்.இது போன்ற கவிஞ்ர்களால்தான் இன்னும் இந்த உலகம் தலைநிமிர்ந்து வாழ்கிறது.வங்க் தேசம் மட்டுமல்ல மற்ற சில நாடுகளும் தடை போட்டாலும் எழுத்து மட்டும் எப்போதும் ,எங்கேயும், எழுந்து நின்று எழுச்சி நடனம் புரியும்.இதை ஆட்சியாளர்கள ஏனோ புரிந்துகொள்வதில்லை.அல்லது புரிந்தும் புரியாமலும் சில நிர்ப்பந்தங்க்ளால் சில முடிவுளை மேற்கொண்டுவிடுகின்றனர்.விளக்கமாக வேறொரு நாளில் எழுதுகின்றேன்.