தமிழ்த் தெய்வம்
முத்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19/7/10

எண்ணங்கள்


எண்ணம்போல் வாழ்வு, மனம்போல் மாங்கல்யம்.
எண்ணம்போல் வாழ்வு என்பது நமது அனைத்து தரப்பு மக்களின் எண்ண அடிப்படையில்தான் வாழ்வு அமையும் என்பதாகும்.ஒருவன் வாழ்வில் உயர வேண்டுமானால் அடிப்படையில் சிறு வயது முதல் தன் எண்ணங்களை நல்வழிப் படுத்திவாழ கற்றுக்கொள்ளவேண்டும்.பெற்றோர்களும் அவர்களுக்கு வழி காட்டி உதவி புரிய வேண்டும்.
அதே போல மனம்போல் மாங்கல்யம் என்பது பெண்களுக்காக சொல்லப்பட்ட ஒன்று.பெண்களின் மனம்,அதாவது எண்ணம், எப்படியோ அப்படித்தான் அவர்களின் வாழ்க்கை அமையும்.நல்ல கண்வன் அமைந்து நல் வாழ்க்கை வாழ,பெண்களும் தங்களின் எண்ணங்களையும் வாழ்க்கை முறைகளையும் நல்ல முறையில் அமைத்துகொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எண்ணம் அமைய, நல்ல முறையில் வாழ்க்கையில் உயர்வு பெற,அனைவரும் நல்ல கல்வி கற்று தெளிவு பெற வேண்டும்.நல்ல கல்வி கற்பதன் மூலம், நல்ல எண்ணம் வளர்ந்திட, பெற்றோர்களும் ஆசிரியர்களும் துணை நிற்க வேண்டும்.
"ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு இரண்டாவதுபெற்றோர்கள்.
பெற்றோர்கள்பிள்ளைகளுக்குஇரண்டாவதுஆசிரியர்கள்."

மனிதனின் இரத்தஓட்டத்திலிருந்து வெளிப்பட்டு வருவதே எண்ண ஓட்டம்.மனிதன் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பவும், கற்ற கல்விக்கேற்பவும் எண்ண அலைகள் மாறுபடும்.ஒருவனின் எண்ணமே அவன் வாழ்வின் தன்மையை வெளிப்படுத்தும் கருவியாகும்.ஒருவனின் வாழ்க்கை நிலயை ஆராய்ந்தால் அவனுடய எண்ணம் எப்படிப்பட்டது என்பதை
அறிய முடியும்.
ந்ற்குடியில் பிறந்தவர்கள் எல்லாம் நால் எண்ணம் கொண்டவராகவே வாழ்வர்.ஆனால் சூழ்நிலை சேர்க்கை ஆகியவற்றால் எண்ணத்தின் ஏழ்மை நிலை வெளிப்படும்.நாம் ஒருவ்ரைப் பார்க்கும்போது நல்லவர் என்று நினைப்போம். ஆனால் அவரது குண்ம் நாய்க்குண்த்தைவிட கீழாக இருக்கும்.சிலர் பிறப்பால் தாழ்நிலை அடைந்திருந்தாலும் உயர்ந்த கல்வியால் உயர்ந்த எண்ணத்தால் நல்ல வாழ்வு வாழ்வர்.ஆனாலும் உலகம் அவர்களை ஏற்ற இறக்கத்துடன் தான் பார்க்கும்.பணத்தை வைத்துக்கொண்டு பகட்டு வாழ்க்கை வாழ்வோர் எல்லாம் பண்பாடு உள்ளவ்ரகளோ, நல்ல எண்ணம் உள்ளவகர்ளோ அல்ல. பசுத்தோல் போர்த்திய புலியாகத்தான் அவர்கள் வாழ்வு அமைந்திருக்கும்.அவர்களை நம்பி பின் செல்வோர் சில நாட்களில் உண்மையை உணர்ந்து அவர்களை உதறித்தள்ளிவிடுவர்.அல்லது தானும் பணத்துக்கு அடிமைப்பட்டு சின்ன புத்தி படைத்து சீரழிந்து விடுவர்.ஆதலால் நம் எண்ணங்கள் ஏற்றங்கொண்டதாக அமைய நல்ல சிந்தனை, நல்ல ந்டத்தை, நல்லசினேகம் ஆகியவற்றை நாம் வாழ்வில் கைக்கொள்ள வேண்டும். மாறாக காழ்ப்புணர்ச்சி கொண்டு "எல்லாம் நானே" என்று வாழ தலைப்பட்டால் தலை உருளுவதோடன்றி தறுதலையாகவும் வாழ நேரிடும்.இதைத்தான் கவியரசு கண்ணதாசன்
நான் நான் என்று நீ அலைந்தால்
தான் தான் என்பதை இறைவன் காட்டி விடுவான்
என்று கூறினார்.

நல்ல எண்ணம் வளர நல்ல நட்புடன், இனிய முகத்துடன், இன்சொல்
பேசி, இறுக்கமான மனதை இலேசாக்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும், இவன் யார் நமக்கு போதனை செய்ய என்ற எண்ணம் கூடாது.ந்ல்லவற்றை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.அதுவே நல்ல பண்பாடு. சொல்லுகின்றவரைப் பற்றி சோடை பேசுவதை விடுத்து சொல்லியுள்ள கருத்தை கவனத்தில் கொண்டு காலத்தின் சூழ்நிலையைக கருதி கவனமுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.வள்ளுவர் கூறியுள்ளதைப் போன்று
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணுவர்
திண்ணியராகப் பெறின்.
நம் எண்ணம் நன்றாக அமைந்து விட்டால் நம் வாழ்வும் திண்ணமாக அமைந்து விடும். வாழ்வோம். வளம்பெறுவோம்.

25/6/10

நம்பிக்கையிருந்தால் நடுவானில் நடை போடலாம்,
வெம்பி வீழாமல் வீறுகொண்டு எழலாம்,
எம்பிக் குதித்தே நிலாவைத் தொடலாம்,
ஏற்றம் பலகண்டு இன்பமாய் வாழலாம். எழிலன்.

வாயை இழந்தவன் வழக்கை இழந்தான்.

அறிவை விரிவாக்க அதிகம் படிக்க வேண்டும்.
"கற்றனைத்தூரறும் அறிவு"

நடிக்க வருமுன் உடுக்க உடையில்லை
நடிக்க வந்தபின் உடுக்க விடவில்லை. ஒரு பெண் கவி.