தமிழ்த் தெய்வம்

13/8/10

சிந்திக்க

             நாட்டில் எவ்வளவோ மாமியார்கள் மருமகள்கள் இருக்கின்றனர்.எல்லோரும் எலியும் பூனையுமாக வாழ்ந்தாலும் ஒரு சிலர் நல்ல பண்பாடு பழக்க வழக்கங்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சிலரோ பசுவும் கன்றும்போல பண்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர்.இந்தக் காலத்தில் எலியும் பூனையும்கூட விட்டுக் கொடுத்து வாழ்ந்து வருவதாக அறியப்படுகின்ற்து.ஆனால் மனித இனத்தில் மட்டும்தான் இன்னும் மாமியாரும் மருமகளும் ஒன்று சேர முடியவில்லை. தன் கழுத்தில் புது அட்டிகையுடன் ஒரு நாள் ஒரு பெண் தனது அலுவலகம் வந்திருக்கின்றாள்.அந்த அட்டிகை புது வடிவத்துடன் புதிய வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தது.இதைக் கண்ட அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அத்தனை பெண்களும் அருகில் வந்து ,ஏதோ உடல் நலமில்லாதவரை விசாரிப்பதைபோன்று அந்த் அட்டிகையைப் பற்றி விசாரித்தவண்ணம் இருந்தனர்.அந்த அட்டிகைப் பெண்ணும் அனைவருக்கும் சலிக்காமல் தன் மாமியார்தான் அதை வாங்கிக் கொடுத்ததாகவும் கூறி, தன் மாமியார் புகழ்பாட ஆரம்பித்துவிட்டார். இதையெல்லாம் கண்டும் காணாமல் அமர்ந்திருந்தார் பக்கத்து இருக்கைப் பெண்மணி.பிறகு ஒருவழியாக கூட்டம் களையத் தொடங்கியதும், இந்தப் பெண்மணி அந்த அட்டிகைப் பெண்ணிடம் இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்தாள்.அந்த அட்டிகை எப்போது வாங்கியது? யார் வாங்கிக் கொடுத்தது? எந்தக் கடையில் வாங்கியது? எவ்வளவு ரூபாய்க்கு வாங்கியது? என்று குடை குடையென்று குடைந்து எடுத்துவிட்டார்.ஆனால் எல்லாவற்றுக்கும் அந்த அட்டிகைப் பெண்மணி அலட்டல் இல்லாமல் பொறுமையாக பதில் அளித்துக்கொண்டிருந்தாள். "எனக்கு எல்லாமே என் மாமியார்தான் .என் கனவரைவிட என் மாமியாதான் எல்லாம் செய்வார். இதை எனக்கு வாங்கிக் கொடுத்த்தும் என் மாமியார்தான்"என்றுக் கூறியவர் பிறகுதான் கவனித்தார் அந்தப் பெண்ணின் கண்ணில் நீர் மல்குவதை. பிறகு அப்பெண்ணிடம் "ஏன்? என்ன ஆச்சு? என் மாமியார் மாதிரி உங்களுக்கு இல்லையே என்ற ஏக்கமா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மனி, "அப்படியில்ல, எனக்கு ஒரு மருமகள் இல்லையே" என்றாரே பார்க்கலாம்.

3/8/10

இறைவன் திருவிளையாடல்

வணக்கம் நண்பர்களே,
1987-88 ம் ஆண்டு நான் சென்னை இராயபேட்டை மருத்துவமனையில் இதய நோய் காரண்மாக அனுமதிக்கப்பட்டிருந்தேன்.எங்களுடைய சிறப்பு வகுப்பில் (special ward)ல் நாங்கள் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டிருந்தோம். ஒரு வயதான பெரியவரும எங்களுடன் அனுமதிக்கப்ப்ட்டிருந்தார்.அவருக்கு சுமார் 55 வயது இருக்கலாம். அவருக்குத் துணையாக அவருடைய மனைவி இருந்தார். ஒரு நாள் இரவு அவர் கொஞ்சம் மோசமான நிலையை அடைந்தார். இரவு 7,மணியள்வில் மூத்த வைத்தியர் (chief doctor) வந்தார். பெரியவரை ப்ரிசோதனை செய்துவிட்டு அந்த அம்மாவிடம் ,அவ்வள்வுதான் உறவினர்களுக்கு சொல்லி அனுப்புங்கள் என்று கூறிவிட்டு போய்விட்டார்.அந்த அம்மாள் அழுது அரற்றியது எங்களுக்கே பரிதாபமாக இருந்தது.அந்த அம்மாள் கொஞ்ச நேரம் அவரை உற்றுப் பார்த்துவிட்டு அவரது உள்ளங்காலை நன்றாக அழுத்தி தேய்த்துவிட்டார்.என்ன ஆச்சரியம் ,பெரியவர் கொஞ்சம் அசைந்து கொடுத்தார்.ஆனால் அந்தோ பர்தாபம் பெரியவர் மீண்டும் கொஞ்ச நேரத்தில் கண்ணை மூடிவிட்டார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு ஒரு இளம் பெண் மருத்துவர் வந்தார்.அவருக்கு சுமார் 25(அ)26 வயது இருக்கலாம்.பயிற்சி மருத்துவராக இருக்க வேண்டும்.அல்ல்து புதிதாக் வேலைக்கு செர்ந்திருக்கவேண்டும்.அவரிடம் இந்த அம்மாள் அழுதுகொண்டே த்ன் நிலையை விளக்கினார்.அந்த மருத்துவரோ அவரிடம் "கவலைப் ப்ட வேண்டாம்.நான் முயற்சி செய்கிறேன்" என்று கூறிவிட்டு அவரும் பெரிய்வரின் காலைத் தேய்க்க ஆரம்பித்தார்.இப்படியே அவர் கொஞ்ச நேரம் தேய்த்து விட்ட் பிறகு அந்த அம்மாளிடம்,"கொஞ்ச நேரம் இப்படியே செய்து கொண்டிருங்கள், இதோ வருகிறேன்"என்று போய்விட்டார்.எங்களுக்கு யாருக்கும் நம்பிக்கை இல்லை. இந்த சின்ன பெண் வேலை அவ்வளவுதான் என்று நாங்கள் முடிவு செய்து அந்த அம்மாளுக்கு ஆறுதல் கூறஆரம்பித்துவிட்டோம்.சிறிதுநேரத்தில் அந்த் பெண் மருத்துவர் திரும்பி வந்தார்.வந்தவர் எதுவும் பேசாமல் தானே பெரியவரின் காலை எடுத்து நன்றாக தேய்க்கத் தொடங்கினார்.எவ்வெள்வு நேரம் தேய்த்தார் என்பது தெரியாது.நாங்கள் கண்ணயர்ந்து விட்டோம்.திடீரென்று எங்களை அந்த அம்மாள் எழுப்பினார். திடுக்கிட்டு விழித்தால் அந்த அம்மாளும் மருத்துவரும் சிரித்துக் கொண்டிருதது எங்களுக்கெல்லாம் ஆசசரியம், பெரியவர் சிறிது அசைந்தார்.அணைவருக்கும் அளவ்ற்ற மகிழ்ச்சி. பிறகுதான் அந்த மருத்துவரிடம் மூத்த ம்ருத்துவர் கூறியதை அந்த அம்மாள் விளக்கிக் கூறினார்.அப்பொழுது அவர் முகத்தைப் பார்க்கவேண்டுமே.தான் பெரிய சாதனை செய்ததை எண்ணி தானே உள்ளுக்குள் உணர்ச்சிப் பெருக்குடன் அந்த அம்மாளின் கைகளைப் பிடித்துக் குலுக்கிவிட்டு புறப்பட்டார்.உடனே அந்த அம்மாள் வயது விதியாசம் பாராமல் அவர் காலில் விழுந்து கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு அழுதார்.எங்களுகெல்லாம் என்ன சொல்வ்தென்றே ஒன்றும் புரியாமல் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் போன பின் நாங்கள் அந்த அம்மாவிடம் "இப்பொழுது வந்தது மருத்துவர் இல்லை.அந்த கடவுள்தான் வந்து உங்கள் கணவரைக் காப்பாற்றினார்".என்று கூறினோம்.இது ந்டந்த்து 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இது ஏன் இப்போது நினைவுக்கு வந்த்து என்றுதானே கேட்கின்றீர்கள்.காரணம் இலலாமலா? நேற்று (02.08.2010) The Hindu நாளிதழில் coma வில் இருந்த ஆறு வயது சிறுமியை இசை மூலம் (Music Therapy) மீண்டும் உயிர் பெற்று எழச் செய்ததாக ஒரு செய்தி வந்ததும் எனக்கு ஆச்சரியம்.நாம் முன்பு பார்த்து அறிந்தது போல உள்ளதே என்றுதான். ஆதலால் நண்பர்களே இதையெல்லாம் பார்க்கும்போது Medical Miracle என்பதைவிட இறைவனின் திருவிளையாடல் என்றுதான் கூறவேண்டும்.
ஒரு நாட்டில் ஒரு பெரிய மருத்துவர் இருந்தார்.அவரிடம் வந்தால் எப்படிப் பட்ட நோயும் குண்மாகிவிடும் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி இருந்தது.ஒருநாள் அவ்ரிடம் மக்கள் வெள்ளம் அலைமோதியது.ஒரு அரை மணி நேரம் அவர் யாரையும் பார்க்கமாட்டார் என்று கூறப்பட்டது. அரைமணி நேரத்துக்குப் பிறகு வந்த மருத்துவரிடம் "ஏன் இப்படி எங்களை காக்க வைத்து விட்டீர்கள்? எங்களை யார் காப்பாற்றுவது?" என்று மக்கள் கேட்டனர். "நான் சர்ச்சுக்குப் போய்விட்டு வருகிறேன்.நாம் அனைவரையும் அந்த கர்த்தர் காப்பாற்றுவார்" என்று கூறிவிட்டு தன் பனியைத் தொடர்ந்தார் அந்த மருத்துவர். இதுவும் இறைவன் திருவிளையாடல்தானா?.

21/7/10

நல்ல தகவல்கள்

1. இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்ப பிண்ணணியையும் கூடவே எடுத்து செல்கின்றனர்.அதனால் அவர்கள் எப்போதும் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே இருப்பது போலவே உணர்கின்றனர்.
ஆலன் ரோலண்ட்.

2.வனத்தில் மேய்ந்தாலும், வானத்தில் மேய்ந்தாலும், இனத்தில் வந்துதான் அடையனும்.

3.ஒரே கூரையின்கீழ் பாதுகாக்கப்பட்ட இணைப்புதான் குடும்பம். ஐ.நா. சபை.

4.முதுமையில் சில நேரங்களில் நினைவுக்கு வருவது செய்த தவறுகள்,செய்ய தவறிய உடற்பயிற்சிகள்.

5.வாழ்க்கையில் சில நேரங்களில் அசைவும் வேண்டும்,சில நேரங்களில் இசைவும் வேண்டும்.

6.ஆசையில்லாமல் வாழ்ந்து மறையலாம், ஓசையில்லாமல் வாழ்ந்து மறையலாமா?
வாழ்க்கையில் தன்னுடைய தடத்தை பதித்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

7.மனைவியின் அறிவை பகலில் பார்க்கக் கூடாது. அழகை இரவில் பார்க்கக் கூடாது.

8.எல்லா பெண்களும் இருட்டில் அழகாகத்தான் இருப்பார்கள்.

9. பிரிவு வந்தால் புரிந்து கொள்ளலாம்.புரிந்து கொண்டால் பிரிவு வராது.

10கண்மயக்கம் காதல் பிரியும்போது,கண்ணீர் ம்யக்கம் நட்பு பிரியும்போது.

11.சருகுகள் சில நேரம் சல சலப்ப்பை உண்டு பண்ணும்.சழக்கர்கள் சில நேரம் சதிசெயலை உண்டு பண்ணுவர்

----------ஃ கா ------------

19/7/10

எண்ணங்கள்


எண்ணம்போல் வாழ்வு, மனம்போல் மாங்கல்யம்.
எண்ணம்போல் வாழ்வு என்பது நமது அனைத்து தரப்பு மக்களின் எண்ண அடிப்படையில்தான் வாழ்வு அமையும் என்பதாகும்.ஒருவன் வாழ்வில் உயர வேண்டுமானால் அடிப்படையில் சிறு வயது முதல் தன் எண்ணங்களை நல்வழிப் படுத்திவாழ கற்றுக்கொள்ளவேண்டும்.பெற்றோர்களும் அவர்களுக்கு வழி காட்டி உதவி புரிய வேண்டும்.
அதே போல மனம்போல் மாங்கல்யம் என்பது பெண்களுக்காக சொல்லப்பட்ட ஒன்று.பெண்களின் மனம்,அதாவது எண்ணம், எப்படியோ அப்படித்தான் அவர்களின் வாழ்க்கை அமையும்.நல்ல கண்வன் அமைந்து நல் வாழ்க்கை வாழ,பெண்களும் தங்களின் எண்ணங்களையும் வாழ்க்கை முறைகளையும் நல்ல முறையில் அமைத்துகொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எண்ணம் அமைய, நல்ல முறையில் வாழ்க்கையில் உயர்வு பெற,அனைவரும் நல்ல கல்வி கற்று தெளிவு பெற வேண்டும்.நல்ல கல்வி கற்பதன் மூலம், நல்ல எண்ணம் வளர்ந்திட, பெற்றோர்களும் ஆசிரியர்களும் துணை நிற்க வேண்டும்.
"ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு இரண்டாவதுபெற்றோர்கள்.
பெற்றோர்கள்பிள்ளைகளுக்குஇரண்டாவதுஆசிரியர்கள்."

மனிதனின் இரத்தஓட்டத்திலிருந்து வெளிப்பட்டு வருவதே எண்ண ஓட்டம்.மனிதன் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பவும், கற்ற கல்விக்கேற்பவும் எண்ண அலைகள் மாறுபடும்.ஒருவனின் எண்ணமே அவன் வாழ்வின் தன்மையை வெளிப்படுத்தும் கருவியாகும்.ஒருவனின் வாழ்க்கை நிலயை ஆராய்ந்தால் அவனுடய எண்ணம் எப்படிப்பட்டது என்பதை
அறிய முடியும்.
ந்ற்குடியில் பிறந்தவர்கள் எல்லாம் நால் எண்ணம் கொண்டவராகவே வாழ்வர்.ஆனால் சூழ்நிலை சேர்க்கை ஆகியவற்றால் எண்ணத்தின் ஏழ்மை நிலை வெளிப்படும்.நாம் ஒருவ்ரைப் பார்க்கும்போது நல்லவர் என்று நினைப்போம். ஆனால் அவரது குண்ம் நாய்க்குண்த்தைவிட கீழாக இருக்கும்.சிலர் பிறப்பால் தாழ்நிலை அடைந்திருந்தாலும் உயர்ந்த கல்வியால் உயர்ந்த எண்ணத்தால் நல்ல வாழ்வு வாழ்வர்.ஆனாலும் உலகம் அவர்களை ஏற்ற இறக்கத்துடன் தான் பார்க்கும்.பணத்தை வைத்துக்கொண்டு பகட்டு வாழ்க்கை வாழ்வோர் எல்லாம் பண்பாடு உள்ளவ்ரகளோ, நல்ல எண்ணம் உள்ளவகர்ளோ அல்ல. பசுத்தோல் போர்த்திய புலியாகத்தான் அவர்கள் வாழ்வு அமைந்திருக்கும்.அவர்களை நம்பி பின் செல்வோர் சில நாட்களில் உண்மையை உணர்ந்து அவர்களை உதறித்தள்ளிவிடுவர்.அல்லது தானும் பணத்துக்கு அடிமைப்பட்டு சின்ன புத்தி படைத்து சீரழிந்து விடுவர்.ஆதலால் நம் எண்ணங்கள் ஏற்றங்கொண்டதாக அமைய நல்ல சிந்தனை, நல்ல ந்டத்தை, நல்லசினேகம் ஆகியவற்றை நாம் வாழ்வில் கைக்கொள்ள வேண்டும். மாறாக காழ்ப்புணர்ச்சி கொண்டு "எல்லாம் நானே" என்று வாழ தலைப்பட்டால் தலை உருளுவதோடன்றி தறுதலையாகவும் வாழ நேரிடும்.இதைத்தான் கவியரசு கண்ணதாசன்
நான் நான் என்று நீ அலைந்தால்
தான் தான் என்பதை இறைவன் காட்டி விடுவான்
என்று கூறினார்.

நல்ல எண்ணம் வளர நல்ல நட்புடன், இனிய முகத்துடன், இன்சொல்
பேசி, இறுக்கமான மனதை இலேசாக்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும், இவன் யார் நமக்கு போதனை செய்ய என்ற எண்ணம் கூடாது.ந்ல்லவற்றை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.அதுவே நல்ல பண்பாடு. சொல்லுகின்றவரைப் பற்றி சோடை பேசுவதை விடுத்து சொல்லியுள்ள கருத்தை கவனத்தில் கொண்டு காலத்தின் சூழ்நிலையைக கருதி கவனமுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.வள்ளுவர் கூறியுள்ளதைப் போன்று
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணுவர்
திண்ணியராகப் பெறின்.
நம் எண்ணம் நன்றாக அமைந்து விட்டால் நம் வாழ்வும் திண்ணமாக அமைந்து விடும். வாழ்வோம். வளம்பெறுவோம்.

25/6/10

நம்பிக்கையிருந்தால் நடுவானில் நடை போடலாம்,
வெம்பி வீழாமல் வீறுகொண்டு எழலாம்,
எம்பிக் குதித்தே நிலாவைத் தொடலாம்,
ஏற்றம் பலகண்டு இன்பமாய் வாழலாம். எழிலன்.

வாயை இழந்தவன் வழக்கை இழந்தான்.

அறிவை விரிவாக்க அதிகம் படிக்க வேண்டும்.
"கற்றனைத்தூரறும் அறிவு"

நடிக்க வருமுன் உடுக்க உடையில்லை
நடிக்க வந்தபின் உடுக்க விடவில்லை. ஒரு பெண் கவி.

23/6/10

நல்ல தகவல்கள்

1.நேற்று என்பது உடைந்த பானை,
இன்று என்பது அழ்கிய வீணை,
நாளை என்பது மதில்மேல் பூனை.

2.முடியுமா என்பது மூட நம்பிக்கை,
முடியாது என்பது அவ நம்பிக்கை,
முடியும் என்பதே தன்னம்பிக்கை.

3.கற்றல்,கேட்டல்,பேசுதல்,படித்தல்,எழுதுதல்
ஆகியவை திறனை வளர்க்க உதவும்.

4.Defeat the defeat before the defeat defeats you.

5.பகலின் திரைச்சீலைதான் இரவு.

6.இள்மைக் காலத்தில் படித்து புரிந்து கொள்ள கற்க வேண்டும்,பிற்கு
க்ற்று தெரிந்து கொள்ள படிக்க வேண்டும்.

7.அறியாமைதான் அறிவின் திரை.

8.வெட்ட வெட்ட முளைக்கும் வித்தையை முட்செடியிடம் கற்க வேண்டும்.
விழ விழ எழும் சூட்சுமத்தை கடல் அலையிடம் கற்க வெண்டும்.
அயராது உழைக்கும் வித்தையை சிலந்தியிடம் கற்க வேண்டும்.
தள்ராத மனத்திடத்தை புறாக்களிடம் கற்க வேண்டும்.

9.கடன் வாங்க கற்றுக்கொள்,கடன் வாங்காமலும் வாழ கற்றுக்கொள்.

22/6/10

சிலமணி நேரம் சிரிக்காமல் இருங்கள்.

பல மணி நேரம் அழாமல் இருங்கள்.

மண்ணுலகில் நீங்கள் மனிதனாய் வாழலாம்

மனித நேயத்துடன். எழிலன்.
--------------------------------------------------

Don't walk in front of me, i may not follow you,
Don't walk behind me ,i may not lead you,
Just walk beside me and be my friend.
ALBERT COMUS.
---------------------------------------------------

கோபம் என்பது மற்றவர்களின் தவறுகளுக்கு நாம் கொடுததுக் கொள்ளூம் தண்டனை. எழிலன்.
-----------------------------------------------------------------------------------

வானமே எல்லை?
வானமே இல்லை. எழிலன்.
-----------------------------------------------------------------------------------

ஆணுக்கு அருங்கேடு நினைத்தாலும
பெண்ணுக்கு பிழை வரக்கூடாது. யாரோ.
--------------------------------------------------------------------------------------
கேட்டதை மறந்து போனேன்,
பார்த்ததை நினைவில் வைத்தேன்,
செய்ததை கற்றுக் கொண்டேன்.
சீனப் பழமொழி.



--------------------------------------------------------------------------------------

17/6/10

ம்னிதனின் கண்டு பிடிப்புகளில் மிக அழகானது,மிகவும் அற்புதமானது குடும்ப அமைப்பு. ஏங்கல்ஸ்.




பொன்னோ பொருளோ தெவையில்லை,
அன்பும் அறமும் அருளும் போதும்.
மனித நேயம் மலர.

பரிபாடல்.



The purpose of life is a life of purpose.

ரயில் பயணம்

நான் (17.6.2010)காலை தஞ்சையிலிருந்து சென்னைக்கு குளிர்சாதனப் பெட்டியில் பயனித்து
தாம்பரம் ரயில் நிலயத்தில் இறங்கினேன்.இரவு மயிலாடுதுறை ரயில் நிலயத்தில் ஒரு சிரு குடும்பத்தினர் ஏறினர்.ஒரு வயதான அம்மா,இரண்டு பேர் 40லிருந்து 45வ்யது மதிக்கத்தக்க ஆண்கள்,அவர்களின் துனைவியர்கள்மற்றும் இரு குழந்தைகள்(சுமார் 3வயது,1வயது).அனைவரும் ஏறியது சரி.அவர்களுக்கு படுக்கைகள் இருந்தன.ஆனால் அவர்கள் எடுத்து வந்த சாமான்கள்.....? இயகோ....அது மட்டுமா? தாம்பரம் வரும் வரை ஒரே பெச்சும் சத்த்மும்தான்.மற்றவர்கள் உறங்குகின்றனறே என்ற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல் அவர்கள் தங்கள் மனம் போன போக்கில் விடியும் வரை ஒரே கூச்சல்தான்.தாம்பரம் ரயில் நிலயத்தில் ரயில் நின்றதும் இற்ங்க வேண்டியகள் இறங்கினர்.அதில் நானும் ஒருவன்.அந்த குடும்பத்தினரும் இறங்கினர்.தங்கள் சாமாங்களை சரிபார்த்து இற்க்கி வைத்தனர்.அந்தோ பரிதாபம்!...தூங்கிக்கொண்டிருந்த த்ங்கள் 1 வயது குழந்தையை மறந்து விட்டனர்.சாமாங்களை மாத்திரம் சரியாக உள்ளதா என கவணித்து எடுத்து வைத்தவர்கள் குழந்தையை மறந்து விட்டனரே.நல்ல வேளை ரயில் புறப்படுகின்ற் சமயத்தில் ஒருவர் தாவி ஏறி குழந்தையை எடுத்து வந்து விட்டார்...
நமது ரயில்வே நிர்வாகத்தினர் "குறைந்த சாமான்,நிறைந்த வசதி" என எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் இது போன்ற் மர மண்டைகளுக்கு ஏறுவதில்லையே. தங்கள் குழந்தையை அல்லவா பறிகொடுக்க இருந்த்னர்.

22/5/10

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை உனக்கிருந்தால்
தரணியை நீ ஆளலாம்

தான் என்று நினைத்து விட்டால்
தறுதலையாய் வீழலாம்.

வாழ்க்கையை எல்லொருமே வ்ள்முடன் வாழ என்னுகின்றனர்.ஆனால் முடிகின்றதா?ஏற்ற் இறக்கங்க்ள்,உயர்வு தாழ்வுகள்,ஏன்? இயற்கையின் நியதியை யாரும் எதிர்பார்த்து வாழ்வதில்லை.நம்பிக்கைதான் வாழ்க்கை.குளம் வற்றிவிட்டதென்று கொக்கு நினைப்பதில்லை.மீண்டும் மழைக்காலம் வருமல்லவா? மழைக்காலம் வந்து விட்டால் மீண்டும் கோடைகாலம் வந்து விடுமே!
இருட்டிவிட்டதென்று மனித மனம் சும்மா இருப்பதில்லை.விடியல் வரும் என்ற நம்பிக்கையோடு மறுநாள் செய்யவெண்டியவற்றை அசை போடுகின்றது.இமயமலையை ஏற் என்னியவன் உயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் த்ன் எண்ணத்தை நிறைவேற்றத் த்ன்ன்ம்பிக்கையுடன் ஏறினான்.வெற்றி பெற்றான்.அப்படித்தான் உயர நினைப்பவர்கள், தன்னம்பிக்கையை முதலில் வளர்த்துக்கொள்ளவேண்டும்.த்றுதலை எண்ணம் தலை எடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பூனையைப் பிடித்த்வன் யானையைப் பிடிக்க எண்ணி தோல்வி கண்டதைப் போல நீச்சல் குளத்தில் நீந்தியவன் கடலில் நீந்தி கறையேறத் துடிப்பதைப் போல சிந்திக்ககூடாது.அப்படி சிந்தனை வரும்போது அப்படிப்பட்ட ஆற்ற்ல் நம்மிடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து,நம் உள்ளத்தைப் பக்குவப் படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு செயலில் இறங்க வேண்டும்.
"நான் என்ற் எண்ணம் வளர்ந்து விட்டால் தான் என்பதை இய்ற்கை காட்டிவிடும்"
சக்கரவர்த்தி ஜுலியஸ் ஸீசர் ஒரு காககா வலிப்புகாரர்,பேரரசனாக வாழ்ந்து காடடவில்லையா? புது உலகம் கண்ட விஞஞானி கொலம்பசுக்கு பிறவியிலேயே ஒரு கால் சூம்பி இருக்குமாம்.அவர் தனது ஊனத்தை நினைத்து உருகி நின்றிருந்தால் இன்று அமேரிக்க என்னும் அற்புத நாடு ஏது? உலகத்தின் இசை மேதை என போற்றப்படுகின்ற் பிதோவன் உண்மையிலேயே செவிடன்.அவன்தானே இசைமேதையானான்.ஆங்கிலமறிந்த அனத்துலகமும் போற்றும் அற்புதக் கவிஞன் மில்டன் இரண்டு கண்களும் பார்வையற்ற குருடன்.அவன்தானே paradise Lost என்ற காவியத்தை தீட்டியவன். அமெரிக்க நாட்டிற்கு புது வாழ்வும் புத்துணர்ச்சியும் ஊட்டிய ரூஸ்வெல்ட் தன்னுடைய இடுப்புக்கு கீழே ஊனமுற்றவர். இவரகள் எல்லோரும் எப்படி தங்கள் வாழ்வில் முன்னெற்றம் கண்டு உலகில் தலைசிற்ந்தவர்களாக உனரப்படுகின்றனர்? தாங்கள் கொண்ட தன்னம்பிக்கையால்தானே?.
என்னால் முடிந்தது ஏன் உங்களால் முடியாது? என்று கேட்கின்றார் திரு. இறையண்பு ஐ.ஏ.எஸ்.தனது திறமையாலும் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்தானே அவர் ஐ.ஏ எஸ் ஆனார்.
. உயரவேண்டுமென நம்பிக்கை வையுங்கள்.
"முடியாது என்பது மூடநம்பிக்கை
முடியுமா என்பது அவ நம்பிக்கை
முடியும் என்பதே தன்னம்பிக்கை"
உண்மை, உழப்பு, உறுதி, விடாமுயற்சி ஆகிய்வற்றைக் கைக்கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுங்கள்.வெற்றி உங்கள் கையில்.உயர்ந்து நில்லுங்கள் உலகம் உங்களை வாழ்த்தும், வணங்கும், வரவேற்கும்.

19/5/10

கவிஞர் கவிமுகில்

1. ஆர்சுத்திப்பட்டு,பிறந்தது.
ஊர்சுத்திப்பட்டு,வ்ளர்ந்தது.
கார் ஓட்டும் கலை பயிண்றது.
கடமையை கண்ணாய் நினைப்பது.
இதுதான் கவிஞர் கவிமுகில்.


2. முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாய் இலக்கிய வானில் இன்ப சிறகடித்துப்
பறக்கும் இனிய கவிஞ்ர் கவிமுகில்.

3.அறிவு ஆற்றல் பெற
அன்பு ஊற்றெடுக்க
பன்புப் பயிர் விளைய
பாசம் நிறைவடைய
" முச்சந்தி" படியுங்கள்.

4.கார்முகிலை காற்று உடைத்தால் கனமழை,
கவிமுகிலை நீ படித்தால் உன் காட்டில் மழை.

5.கவிஞன் ஒரு காலக்கண்னாடி
கவிமுகில் காலா காலத்துக்கும் கண்ணாடி

6.கவிமுகில், தான்பட்ட அறிவை வைத்துக் கொண்டு பாடுபட்டு வளர்ந்துள்ளார்,வ்ளர்ந்து கொண்டும் உள்ளார்,இன்னும் வளருவார், வாழ்த்துக்கள்.


ஆர்.சுப்ரமனியன் காளிங்கராயர்.

13/5/10

மனோரமா தொடர்ச்சி

சீர் கொலைந்த குடும்பத்தின் கதை வெளியில் தெரியாமல் வேதனையொடு அனைத்தையும் அரவனைத்துச்சென்ற் ஆச்சி அனைத்து கலை உலகத்தையும் தம் கைக்குள் அடக்கி வைத்துக்கொண்டிருந்தவர்।ஏற்றுக்கொன்ட் பாத்திரத்தின் எழில்

நிலையை யாவரும் வியக்கும் வண்ணம் எளிதில் புரிய வைத்தவர்.வாயைத் திற்னதாலே வந்து விழும் சொற்கள் எல்லாம் வ்ள்ம்
நிறைந்தவை.தேவர் குல திலகங்கலளே ஆச்சி வாழ அனைத்தும் செய்வோம்.
ந்டிப்பின் இமயத்தையும்
நகைச்சுவையின் இமயத்தையும்
நாம் காப்பொம்.வாழ்க ஆச்சி ,
வளர்க அவர் தொண்டு. காளிங்கரயர்.

மனோரமா.

இன்று காலை குமுதம் வார இத்ழ படித்ததும் துடித்துப் போனேன்।ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஆச்சிக்கா இந்த நிலை?கூடாது ।கூடவே கூடாது।இது இறைவன் திரு விளையாடலா? இயற்கையின் சதியா?
ந்டிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கனேசனுக்கு இனையாக கொடி கட்டிப் பறந்தவரல்லவா திரையுலகில்.