தமிழ்த் தெய்வம்

12/9/11

புதிய பார்வை

      மனிதர்களாய் பிறந்த அனைவரும் தினம் தினம் புதிதாய் பிறந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.அப்படி பிறக்காதவர்கள் வாழததெரியாதவர்கள்.புதிதாய் பிறக்கின்றார்கள் என்றால்,புதிதாய் இந்த உலகைப் பார்க்கின்றாரகள்,புதியவர்களை நேசிக்கின்றார்கள்,புதிய எண்ணங்களை வளர்த்துக்கொள்கின்றார்கள்,புதிய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்கின்றார்கள்.
            தினம் தினம் மனிதன் விழித்து எழுந்ததும் புதி ய  வானத்தைப் பார்க்கின்றான், புதிய கதிரவனைக் கானுகின்றான்,புதிய மல்ர்களை நோக்குகின்றான்,புதிய பறவகள்,புதிய காற்று, புதிய நீர், புதிய நண்பர்கள், புதிய சிந்தனை, புதிய ஓசை, புதிய நாற்றம்,புதிய சாலைகள்,புதிய மேகம் ,புதிய மழை, புதிய தென்றல்,இன்னும் என்னென்னவோ, அவன் பார்க்கும் அனைத்துமே புதியவைகள்தான்.
     நேற்றுப் பார்த்த வானத்தையா நாம் இன்று பார்க்கின்றோம்? அதில் எத்தனை மாற்றங்கள்? எத்தனை வண்ணங்கள்?அத்தனையும் புதிதாய், புதிய தோற்றத்துடன்!  கதிரவனின் ஒளிக்கதிர்களும் அப்படித்தானே,.எத்தனை மாற்றங்கள்? சிலநேரங்களில் வானில் மேகமூட்டம் இருந்தால்,கதிரவனைக் கானவே முடியாதே! மரங்க்ள்,செடிகொடிகள்,புள்ளினங்கள் அனைத்திலுமே புதிய தோற்றங்கள் ,புதிய பரிமான்ங்கள்,அப்பப்பா,அனைத்தும் இயற்கையின் திருவிளையாட்ல்தானே.
                 நாம் உள்ளீழுத்து,வெளிவிடும் மூச்சுக்காற்றும் புதியவைதானே.ஏன், நம்து மூச்சுகூட புதுசுதானே.இப்போதுதான் நாம் புதிதாய் பிறக்கின்றோம்.கவி பாரதி சொன்னானே "இன்று புதிதாய்ப் பிறந்தோம்" என்று.ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் புதிதாய்த்தான் பிறக்கின்றான்.நாள் வளர வளர மனிதனும் வளர்கின்றான்,எப்போழுதும் புதிதாய் வளர்ந்துகொண்டேயிருக்கின்றான்.அந்த புதிய வள்ர்ச்சியில்தான் மனிதனின் எண்ணங்கள் வள்ர்ந்து கொண்டேயிருக்கின்றன.புதிதாய் பிறக்கின்ற ஒவ்வொருநொடியிலும் நம்து முந்தைய எண்ணங்கள் மறைந்து புதிய எண்ணங்கள் உத்யமாகின்றன. நம்மிடம் இருக்கின்ற மகிழ்ச்சி, கோபம் ,வண்மம், பயம்,.அறிவு, ஆற்றல் அனைத்துமே புதிதாய்த்தான் உருவகம் பெறுகின்றன.
       எவனொருவன் தினம் தினம் புதிதாய் பிறக்கின்றானொ அவனெப்போதும் திருப்தியுடன் இருக்கின்றான்.அவனது பார்வயில் கூர்மை தெரியும்,அவனது உடலில் இளமை துள்ளிவிளையாடும்,அவனது ஆற்றலில் அதிக வேகம் இருக்கும்,அவனது மனதில் மகிழ்ச்சி தாண்டவமாடும்,அவனது சிந்தனையில் தெளிவு தெற்றென தோற்றமளிக்கும்.
          தான் என்ற தன்மை கொண்டு,தறுதலையாக வாழும் எண்ணங்களை மறக்க வேண்ண்டும்.தான் என்ற தர்க்கம்,தறுதலை என்ற மூர்க்கம் ஆகியவ்ற்றைக் கொண்டிருப்பவன் மீண்டும் புதிதாய் பிறப்பதேயில்லை .
தன்னுடைய என்ற தன்மையை ஒருவன் இழக்க முன்வர வேண்டும்.என்னுடைய என்ற இறுமாப்பை எவன் என்றும் கைக்கொள்கின்றானோ அவன் தினம் தினம் இறப்பவன்,பிறப்பவனல்ல..எவன் காலச்சக்கரத்தின் சுழற்சியில் அகப்படாமல்  புத்துணர்ச்சியோடு புது உலகை
காண்கின்றானோ அவனே புதிதாய் பிறப்பவன்.
                        "அடுத்தவனை தோற்கடித்தல் உனது வெற்றியல்ல. உனது குறிக்கோளை நீ அடைவதுதான் உன்னுடைய உண்மையான வெற்றி.""