தமிழ்த் தெய்வம்

8/8/11

காப்பி யடித்தல்

                                               எனக்கும் தெர்யாது              
                                                                         
              பள்ளித் தேர்வுக ள் முடிந்து விடைத்தாள்கள் மதிப்பிடும் பணி ஆரம்பமாகி விட்டாலே,நமது ஆசிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.குஷியும் அதிகமாகிவிடும். காரண்ம்,பணம் மட்டுமல்ல,அங்கு அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களும்தான்.சில ஆசிரியர்களுக்கு அறிவு வளரும்,அன்பு பெருகும்,நல்ல எண்ணங்கள் உருவாகும்.சில நேரங்களில் வேடிக்கை விளையட்டுக்கள் கூட ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கை முறைகூட மாறுபட்டுவிடும்.
                                          அப்படி மதிப்பீடு செய்யும் காலங்களில்,இடைவேளையின்போதும்,மதிய உணவின்போதும்,தாங்கள்  சந்தித்த ,வேடிக்கையான, வினோதமான ,விளையாட்டுத்தனமான,அறிவுபூர்வமான,சில அழகான நிகழ்வுகளை,ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வர்.ஒருமுறை,ஓர் ஆசிரியர்,
தான் சந்தித்த ஒரு நிகிழ்ச்சியை விவரித்தார். தனக்கு வந்த பள்ளியின் விடைத்தாள்கள் அணைத்தும் நன்றாக இருந்ததாகவும்,ஏறத்தாழ எல்லா மாணவர்களுமே, நல்ல முறையில்,அழகாக, கையெழுத்தும் தெளிவாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
                                         உடனே அருகிலிருந்த அவ்ருடைய சகா ஒருவர்,'நீங்கள் கொடுத்துவைத்தவர் அய்யா,எங்களுக்கும் சில பள்ளிகளிலிருந்தும் வருகின்றதே,பார்க்கவே சகிக்கவில்லை.வாந்தி எடுத்தது போல் எழுதியிருக்கிறனர்,என்று அவர் தன்னையே நொந்து கொண்டார்.  பிறகு முன்னால் ஆசிரியரோ,தான் சந்தித்த இன்னொன்றையும் குறிப்பிட்டார்.
                                       இரண்டு மாண்வர்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியாக எலலா விடைகளையும் சரியாகவே எழதியிருந்தனர்.அதுவும்' ஈயடிச்சான் காப்பி 'என்று
கூறுவோமே அப்படி.'அதை எப்படி அய்யா  தாங்கள் ஈயடிச்சான் காப்பி என்று
கூற முடியும்?' என்று கேட்டனர். அதற்கு அவர்,'ஒரு மாணவன் ஒரு வினாவுக்கு ஒரு விடை எழுதியிருந்தால் அதைப் போலவே அடுத்த மாணவனும் அப்படியே ஜெராக்ஸ்காப்பியைப் போல் எல்லா விடைகளையும்
எழுதியிருந்தான்.' என்று கூறினார்
                                              ' தாங்கள்தான் எல்ல மாணவர்களும் நன்றாகவே எழ்தியிருப்பதாகவே கூறுகின்றீர்கள். இவர்கள் மட்டும் காப்பி அடித்ததாக எப்படிசொல்கின்ற்ரீர்கள்?'என்று கேட்டனர்.அதற்கு அந்த ஆசிரியர்
எப்படிக் கண்டுபிடித்தார் என்பதை , 'இறுதி வினாவுக்கு, ஒரு மாணவன் 'எனக்குத் தெர்யாது' என்று பதில் எழுதியிருந்தான்'.இன்னொரு மாண்வன்தான் காப்பி அடித்தான் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார் ஆசிரியர். ,அவன் என்ன எழுதியிருந்தான் என்பதைமுதல் வரியிலேயே கூறி விட்டாரே.

கருத்துகள் இல்லை: