தமிழ்த் தெய்வம்

16/8/11

காலாம்புடிக்கியும், மேணாமிணுக்கியும். (நையாண்டி தொடர்)

   கா.பு :  டேய், மேனா மினுக்கி,இன்ன்னைக்கி என்னடா இவ்வளவு நேரம்?
 மே.மி:  ஓய்வு எடுக்கலாமுன்னு போனேன்.நாடு போற போக்கை பார்த்து ,..
 கா.பு: ஒடனே திரும்பி வந்துட்டிங்களாக்கும்.நாட்டு மேல அவ்வளவு அக்கறை?
மே.மி: ஆமாண்ணே.நாட்டு மேல இல்லண்ணே, வீட்டு மேலதான்.
கா.பு :என்னடா  முன்னாள் முதல்வர் கருனாநிதி மாதிரி பேசுற?
 மே.மி:ஆமாண்ணே,.. என்னண்ணே திடீர்னு கருனாநிதி ராகு காலத்தைப் பற்றி பேச ஆரம்பிச்சுட்டாரு?
  கா.பு. அட ஆமாடா,அவ்ரு மஞ்சள் துண்டு போட ஆரம்பிச்சதிலேருந்து நாட்டு மக்கள் அத்தனை பேரும் கேட்டாங்கடா,'மஞ்சள்துண்டின் மகிமை என்னன்னு,இதுவரை என்ண்டா சொன்னாரு?
 மே.மி: அவரு செஞ்சா அது அவரோட விருப்பம்.மற்றவங்க செஞ்சா அது பகுத்தறிவுக்கு பாதகம்ண்ணே.ஆமாண்ணே, ஏன் அவர் இதுவரைக்கும் சிறையில் வாடும் உடன் பிறப்புக்களை சென்று பார்க்கல?
 கா.பு: ஏண்டா, அவர்தான் டில்லிக்கே சென்று தன்னோட மகள் கனிமொழியையும்,உடன் பிறப்பு ராசவையும் பார்த்துவிட்டு வந்தாரே.தலைநகர் சென்று தன் மகளையும்,ராசாவையும் பார்த்தாலே,நாட்டில் எல்லோரையும் பார்த்ததாகத்தான் அர்த்தம்,புரிஞ்சுக்கோடா.
மே மி:ஏண்ணே,எல்லாமே பொய் வழக்குன்னு சொல்லி புலம்புராரே, அங்கே ராசா, கனிமொழி கைது மட்டும் உண்மையோ? இங்கே அவர் ஆட்சியில் இருக்கும்போது மட்டும் அவர் செய்தது எல்லாம் உண்மையோ?
அவர் செய்தது எல்லாம் உண்மை,.அம்மா செய்தால் பொய்யாகிவிடுமா?
கா.பு: டேய்,அவர் செய்தது எல்லாம் அவ்ருக்கே தெரியும்டா.நெஞ்சுக்கு நீதி எழுதியவர்டா,அதைப் பற்றி அதிகம் பேசாதே.பிறகு உனக்கும் அன்பழகனிடம் சொல்லி வக்கீல் நோட்டீஸ் வந்துவிடும்.
மே.மி: ஏண்ணே,எல்லா வழக்கையும் சட்டப்படி சந்திப்போம்னு சொல்ராரே,அப்ப சட்டப்படி இல்லாமலும் சந்திக்க முடியுமாண்ணே?
 கா.பு: டேய்,அவ்ர எப்படி சந்திச்சாலும் வாய் ஜாலம் காடட முயல்வாரே தவிர வழக்கில் அவர் ஜாலம் செல்லாது.'அனைத்து தமிழக மக்களும் அம்மாவை அரியனையில் அமர்த்தியுள்ளனர்.இந்திய துணைக்கண்டமே அம்மாவின்  வாய் அசைவுக்காக காத்துக் கிடக்கிறது,ஏன்,அமெரிக்கா உட்பட அகில உலகமும் அம்மாவின் நடவடிக்கைகளைக் கண்டு அசந்து போய் நிற்கிறது.
 மே மி: அமாண்ணே,பத்திரிகைகளில் மட்டும் கேள்வி ப்தில் வடிவிலும்,கடிதங்கள் மூலமும் எழுத்து ஜாலம் காட்டி தனது கட்சித் தொண்டர்களை ஏமாற்றுகின்றாரே தவிர,உறுப்படியாக இதுவரை எந்த நடவடிக்கையுமெடுக்கவில்லையே?....
 கா.பு: டேய்,அப்படி சொல்லாதே,விரைவில்,  தன் குடும்பத்தாருடன்  தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக செய்திகள் உலா வருகின்றன.அப்படி
நடந்துவிட்டால்.......
 மே மி: அண்ணே நடக்கிற்தைப் பத்தி பேசுங்கண்ணே. இவர் குடும்பத்தினர்எப்பண்ணே இது மாதிரி  நிகழ்ச்சியிலெல்லாம் கலந்துகிட்டு இருக்காங்க? எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலைண்ணே.
 கா.பு: டேய்,இதையெல்லாம் அவ்ர் கட்சிக்காரர்களும்,நாட்டு மக்களும் புரிந்துகொண்டால் சரிதான்.நமக்கேண்டா அந்த வம்பு?
 மே.மி: ந்ட்டு மக்கள் புரிந்துதாண்ணே ஓய்வு கொடுத்தாங்க,அவ்ர்தாண்ணே இன்னும் புரிந்தும் புரியாததுபோல ந்டந்துக்கிறார்.நாமென்ன செய்ய முடியும்?.../
 சரிண்ணே,ஒரு சின்ன வேலை இருக்கு, நாளைக்கு வர்றேண்ணே. வரட்டுமா?
 கா.பு: சரி, போய்வா, மீண்டும் சந்திப்போம்..

கருத்துகள் இல்லை: