தமிழ்த் தெய்வம்

5/8/11

சாதி

                                                 சாதி
               ' சாதி இரண்டொழிய வேறில்லை' ஒள்வையார் அக்காலத்தில் பாடியது.
இப்பொழுது சாதி மூன்றாக உள்ளதே,திருந்ங்கைகளையும் சேர்த்து.
               ' சாதிகள் இல்லையடி பாப்பா' பாரதியார் பாடினார்.ஆனால் அவர்கூட தன்
சாதியில்தானே திருமணம் செய்துகொண்டார்.
               நமது நாட்டில்தான் சாதிகளொழியவேண்டும் என்று கூறுவோரும், தன் சாதியில்தான் எல்லாம் நடைபெற வேண்டும்,தன் சாதியினருக்கே எல்லா நலமும், வளமும் கிடத்திட வேண்டும் என்றுகூச்சலிடுவோரும் அதிகம். ஏன்,
அரசியலில்கூட, சாதியை ஒழிப்போம் என்று கூறிவிட்டு,தேர்தல் வந்து விட்டால்
எந்த தொகுதியில் ,எந்த சாதியினர் அதிகம் ,என்று அலசி ஆராய்ந்து, அந்த சாதியினரைத்தானே வேட்பாள்ராக அறிவிக்கின்றனர்.
                                சாதி என்பது பண்டைய நாட்களில் இருந்த்தாக தெரியவில்லை.மக்கள் தோன்றி, பல இடங்களில்,கூட்டம் ,கூட்டமாக வாழ
தலைபட்ட் பின்னர்தான், தங்களின் உணவு, உறைவிடம் போன்றவ்ற்றுக்காக
பல்வேறு தொழில் முறைகளை மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர்.இப்படி, தொழில் முறகளை வைத்துத்தான், தங்களுக்குள்ளேயே ,தாங்க்ள் யார், யார் என
பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இப்படித்தான், உல்கம் முழுவதும் மக்கள் தோன்றி
வாழ்ந்து வந்த்ள்ளதாக அறியப்படுகின்றது
                            பிற்காலத்தில், நமது நாட்டில் வந்து குடியேறிய ,ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்தான், மக்களிடையே சாதிப் பிரிவினையை ஏற்படுத்தி உள்ளனர்.
அந்த வகுப்பினர், நம் நாட்டிற்கு வருவத்ற்கு முன், நம் நட்டில் வாழ்ந்து வந்த நாகர் என்ற இனத்தவரிடமோ,திராவிடர், தமிழர் என்ற யாரிடத்தும், சாதிப்
பிரிவுகள் இருந்த்ததாக தெரியவில்லை.நம் நாட்டில் வாழ்ந்து வந்த மக்களைவிட, தாங்கள் எதோ அதிகம் அறிந்ததாக கூறிக்கொண்டு, ,அவர்களிடையே சாதிப் பிரிவிணையை ஏற்படுத்தி,தங்களின் கீழ் பணியாற்ற
பணித்தனர் .இப்படி ஏற்பட்டதுதான் சாதிப் பிரிவுகள்.உலகிலேயே நமது நாட்டில்தான், சாதிகளும் ,சாதிகளின் ஆதிக்கமும்.அதிகம்.
                  ஒருவன் இன்ன சதியைச் சேர்ந்தவன் என்பதை ,மிக விவரமாக பண்டைய நூல் ஒன்று கூறுகின்றது. ஒருவனது சாதியும், அவனது முன்னேர்ர்களது சாதியும் , ஏழு தலைமுறைகளாக ஒரே சாதியினராக இருத்தல் வேண்டும்.அதே போல, அவனது மனைவியின் சாதியும் அவளது
முன்னேர்ர்களது சாதியும் அப்படியே ஏழு தலைமுறைக்கும் ஒரே சாதியினராக
இருத்தல் வேண்டும்.    எழேழு தலைமுறை என்று கூறுவோமல்லவா?, அப்படி..
இதன்படி, முன்னோர்களின் ஏழேழு தலைமுறையும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தால்தான், அவர்களை அந்த சாதியை செர்ந்தவர்களென்று அணைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.இப்படி மிக அழகாக, ஆணித்தரமாக ,அந்த காலத்திலேயே, சாதியைப் பற்றி, விளக்கமாக
 கூறப்பட்டுள்ளது.
                சாதி என்ற சொல் caste என்ற ஆங்கில சொல்லிலிருந்தும் caste என்ற சொல் casta என்ற போர்த்துகீசீய சொல்லிலிருந்தும் உருவானது.casta என்றால்sect,race பிரிவு,இனம் என்று பொருள்.இதுதான் த்மிழில் சாதி என்று உருவானது.இதிலிருந்தே பண்டைய காலங்களிலிருண்தே சாதிகள் இருந்துள்ளது தெளிவாகின்றது.
                     இப்படித்தான், ஆதி காலம் முதல் நமது நாட்டில் சாதிய அடிப்படையிலேயே எல்லாம் இயங்குகின்றது.அனேகமாக இனி வருங்கால்த்திலும் நமது நாடில் எல்லாமே சாதிய அடிப்படையிதான் இயங்கும் என எதிபார்க்கலாம்.                                 

கருத்துகள் இல்லை: