தமிழ்த் தெய்வம்

13/10/11

நல்ல சிந்தனைகள்

                                                  சிந்தியுங்கள்.
            
         1.பத்து ரூபாய் பூ தலைமேலே
                 அதிக  விலையுள்ள செருப்பு காலுக்கும் கீழே.

           2.வேட்டையாடிவிட்டு திரும்பிய மன்னனிடம், புலவர்,
                 "புலி வேட்டையில் வென்று புவனத்தில் உயர்ந்த மன்னா,இனி
                  உன் சந்ததி எலி வாலைப் பிடித்து உண்ணும்." (Mouse)

           3.சிலந்திக்கு சிக்கலில்தான் வெற்றி, 
             ரோஜாவுக்கு முள்ளில்தான் மனமும் மரியாதையும்,
            மனிதனுக்கு தோல்வியில்தான் வெற்றி.
          
          4.நன்மைகள் போனால்தான் தெரியும்.
            தீமைகள் வந்தால்தான் தெரியும்.

          5.ஒரு விவசாயி வக்கீலிடம் கூறியது,
                 "வயல் போனாலும் பரவாயில்லை,
                  வரப்பு நிலைக்க வேண்டும்"

          6.கள்ளு கெட்டதுதான்-ஆனால் அதை போய்த்தான் பருகவேண்டும்
              பால் நல்லது-ஆனால் நாம் ஒவ்வொரு இடத்திற்கும் போய்த்தான் ஊற்றவேண்டும்          
                உன்னைத் தேடி மக்கள் வந்தால், நீ கள்ளுக்கடைக்காரன்.
                நீ மக்களைத் தேடிச் சென்றால் பால்காரன்.

           7.பள்ளீயில் பிராணி படம் வரைந்தான், மாணவன்,வாயில்லாமல்,
             ஏனெனில் அது வாயில்லா ஜீவனாம்.

             8.மனைவிகள் கனவர்களிடம் பேசக்கூடாதவை.
                     "உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"
                     " நீங்க எப்பவுமே இப்படித்தான்."
                    "  உங்களைக் கட்டிகிட்டு என்னத்தைக் கண்டேன்?"
                     "  தொந்தியும் தொப்பையும் ஆளைப் பார்க்கவே சகிக்கலை"
                    
                                   அடுத்தவர்களிடம்,தன் கனவர்களிடம் உள்ள குறைகளை,அவை சிறியதோ, பெரியதோ, பேசக்கூடாது,உங்கள் பெற்றோரிடம் கூட.

                9.கடவுளைக் காண்பதைவிட கடவுளைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம்.

              10.உலகிலேயே அழகான ம்னிதரும் நீங்கள்தான்,அசிங்கமான மனிதரும் நீங்கள்தான்.
                கொஞ்சம் புன்னகையை, முகத்தில் தேக்கி, உங்களை நீங்களே கண்ணாடியில் பாருங்கள்,உண்மை விளங்கும்.

            11உனது சிந்தனைகளை கண்ணில் தேக்கி வைக்காதே,இதயத்தில் தேக்கி வை.  கண்ணில் தேக்கி வைத்தால், அவை கண்ணீரில் கரைந்துவிடும்.இதயத்தில் தேக்கிவைத்தால்,இதயம் துடிக்கும்போதெல்லாம் ,உன் நினைவில் நின்றுகொண்டேயிருக்கும்.

             12.  Any voiceof freedom is better than the silence of Tyranny
                   
                     It does not mater where you come from-It matters where you move..

                    we cannot control circumstances,bu we can control response to circumstances.
     
             13. வாக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை,
                   போக்கற்றவனுக்கு போலிஸ் வேலை.
   
          இதன்  விளக்கம் இதோ,

                         மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு வாக்கு கற்றவன்தான் வாத்தியார் வேலைக்கு  வரவேண்டும்.
                        குற்றவாளிகளின் போக்கை அறிந்தவன் தான்  போலிஸ் வேலைக்கு வரவேண்டும்.           ,

                                            888888888888888888888




10 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

கடவுளை புரிந்து கொள்வதை விட, நாமே கடவுளாய் ஆகி விடுவது மேல்

ezhilan சொன்னது…

நாம் கடவுளைப்பற்றிப் பேசுகிறோம்.நாமே கடவுளாகிவிட்டால்!......புரிந்துகொள்வது யார்?. கருத்துக்கு நன்றி சூர்யா.

மனோ சாமிநாதன் சொன்னது…

அனைத்து சிந்தனைகளும் ரசிக்க வைத்தது. முக்கியமாய் அந்த 10 ஆவது சிந்த‌னை அழகானது!!

Unknown சொன்னது…

நன்றி ஐயா
தங்கள் சிந்தனைகள்
வியக்க வைக்கின்றன
நன்றி தங்கள் வருகைக்கும்

ezhilan சொன்னது…

நன்றி சகோதரி.தொடர்ந்து வாருங்கள்.இது போன்ற க்ர்த்துக்கள்.நிறைய கிடைக்கும்.

ezhilan சொன்னது…

நன்றி சிவா.தொடர்ந்து வாருங்கள்.தொடருவோம் நட்பை.

சிவகுமாரன் சொன்னது…

சிந்திக்க வைத்த சிந்தனைகள்.

ezhilan சொன்னது…

நன்றி கவிநரே,நீண்ட நாடகளுக்குப் பிறகு எனது வீட்டை எட்டிப் பார்த்ததற்கு.

மாலதி சொன்னது…

மாறுபட்ட கோணம் நல்ல சிச்ன்தனை பாராட்டுகள்

ezhilan சொன்னது…

நன்றி மாலதி.நல்லது நடக்கட்டும் .தொடர்ந்து வருங்கள்.