1. இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்ப பிண்ணணியையும் கூடவே எடுத்து செல்கின்றனர்.அதனால் அவர்கள் எப்போதும் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே இருப்பது போலவே உணர்கின்றனர்.
ஆலன் ரோலண்ட்.
2.வனத்தில் மேய்ந்தாலும், வானத்தில் மேய்ந்தாலும், இனத்தில் வந்துதான் அடையனும்.
3.ஒரே கூரையின்கீழ் பாதுகாக்கப்பட்ட இணைப்புதான் குடும்பம். ஐ.நா. சபை.
4.முதுமையில் சில நேரங்களில் நினைவுக்கு வருவது செய்த தவறுகள்,செய்ய தவறிய உடற்பயிற்சிகள்.
5.வாழ்க்கையில் சில நேரங்களில் அசைவும் வேண்டும்,சில நேரங்களில் இசைவும் வேண்டும்.
6.ஆசையில்லாமல் வாழ்ந்து மறையலாம், ஓசையில்லாமல் வாழ்ந்து மறையலாமா?
வாழ்க்கையில் தன்னுடைய தடத்தை பதித்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
7.மனைவியின் அறிவை பகலில் பார்க்கக் கூடாது. அழகை இரவில் பார்க்கக் கூடாது.
8.எல்லா பெண்களும் இருட்டில் அழகாகத்தான் இருப்பார்கள்.
9. பிரிவு வந்தால் புரிந்து கொள்ளலாம்.புரிந்து கொண்டால் பிரிவு வராது.
10கண்மயக்கம் காதல் பிரியும்போது,கண்ணீர் ம்யக்கம் நட்பு பிரியும்போது.
11.சருகுகள் சில நேரம் சல சலப்ப்பை உண்டு பண்ணும்.சழக்கர்கள் சில நேரம் சதிசெயலை உண்டு பண்ணுவர்
----------ஃ கா ------------
2 கருத்துகள்:
nalla karuthhukkal.thodaravum.ezhil
நல்ல கருத்துகள்... வாழ்த்துகள்...
தொடர்ந்து எடுத்து உரையுங்கள் எங்களுக்கு...
கருத்துரையிடுக