தமிழ்த் தெய்வம்

17/6/10

ரயில் பயணம்

நான் (17.6.2010)காலை தஞ்சையிலிருந்து சென்னைக்கு குளிர்சாதனப் பெட்டியில் பயனித்து
தாம்பரம் ரயில் நிலயத்தில் இறங்கினேன்.இரவு மயிலாடுதுறை ரயில் நிலயத்தில் ஒரு சிரு குடும்பத்தினர் ஏறினர்.ஒரு வயதான அம்மா,இரண்டு பேர் 40லிருந்து 45வ்யது மதிக்கத்தக்க ஆண்கள்,அவர்களின் துனைவியர்கள்மற்றும் இரு குழந்தைகள்(சுமார் 3வயது,1வயது).அனைவரும் ஏறியது சரி.அவர்களுக்கு படுக்கைகள் இருந்தன.ஆனால் அவர்கள் எடுத்து வந்த சாமான்கள்.....? இயகோ....அது மட்டுமா? தாம்பரம் வரும் வரை ஒரே பெச்சும் சத்த்மும்தான்.மற்றவர்கள் உறங்குகின்றனறே என்ற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல் அவர்கள் தங்கள் மனம் போன போக்கில் விடியும் வரை ஒரே கூச்சல்தான்.தாம்பரம் ரயில் நிலயத்தில் ரயில் நின்றதும் இற்ங்க வேண்டியகள் இறங்கினர்.அதில் நானும் ஒருவன்.அந்த குடும்பத்தினரும் இறங்கினர்.தங்கள் சாமாங்களை சரிபார்த்து இற்க்கி வைத்தனர்.அந்தோ பரிதாபம்!...தூங்கிக்கொண்டிருந்த த்ங்கள் 1 வயது குழந்தையை மறந்து விட்டனர்.சாமாங்களை மாத்திரம் சரியாக உள்ளதா என கவணித்து எடுத்து வைத்தவர்கள் குழந்தையை மறந்து விட்டனரே.நல்ல வேளை ரயில் புறப்படுகின்ற் சமயத்தில் ஒருவர் தாவி ஏறி குழந்தையை எடுத்து வந்து விட்டார்...
நமது ரயில்வே நிர்வாகத்தினர் "குறைந்த சாமான்,நிறைந்த வசதி" என எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் இது போன்ற் மர மண்டைகளுக்கு ஏறுவதில்லையே. தங்கள் குழந்தையை அல்லவா பறிகொடுக்க இருந்த்னர்.